கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,000 என்ற வரலாற்று சாதனையைத் தொட்டபோது, நகை வாங்குவது என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகவே தெரிந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் பிறந்ததிலிருந்தே தங்கம் விலை ஒரு சரிவுப் பாதையை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளது. இன்று (பிப்ரவரி 19) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000 முதல் ரூ.1,21,000 வரை விற்பனையாகிறது. ஜனவரி மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 முதல் […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
வங்கதேச அரசு தாரிக் ரஹ்மானின் நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. வான்வெளி கிடைக்காததால், கொல்கத்தாவிலிருந்து குவஹாத்தி மற்றும் இம்பாலுக்குச் செல்லும் சில விமானங்கள் தற்போது நீண்ட பாதைகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது விமான நேரங்கள் மற்றும் இயக்க செலவுகளைப் பாதிக்கிறது. இந்தச் சூழலில், வழிசெலுத்தல் கட்டணங்கள் உள்ளிட்ட செயல்பாட்டு மற்றும் […]
பிரிட்டிஷ் முன்னாள் இளவரசரும் மன்னர் சார்லஸின் சகோதரருமான ஆண்ட்ரூ பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக இன்று கைது செய்யப்பட்டார். அவரது 66வது பிறந்தநாளில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டகாக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைது செய்ததாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகாலை காவல் துறை நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிஹாம் எஸ்டேட்க்கு சென்றது. விண்ட்சரில் இருந்த அவரது இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட […]
பாகிஸ்தானின் கராச்சியில் இன்று அதிகாலை ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக, பல குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.. இதில் 14 பேர் காயமடைந்தனர். எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. காவல்துறை அதிகாரி ஜம்ஷெட் ஆஷர் இதுகுறித்து பேசிய போது , பழைய சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அதிகாலை 4:30 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்தது, […]
மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை சமீபத்தில் அமெரிக்க நீதி வெளியிட்டது.. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்ற அழைக்கப்படும் இந்த கோப்புகளில் வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம், எப்ஸ்டீனுக்கு சொந்தமான ஸொர்ரோ ராஞ்ச்-இல் நடந்ததாக கூறப்படும் பழைய குற்றச்செயல்கள் குறித்து சுயாதீன விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்காக மாநில சட்டமன்றத்தைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் கொண்ட […]
இந்த வார இறுதிக்குள் அமெரிக்க ராணுவம் ஈரான்மீது இராணுவ தாக்குதலைத் தொடங்க தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கு அனுமதி வழங்குவது குறித்து அதிபர் டொனால் டிரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.. வெள்ளை மாளிகைக்கு தகவல் சமீப நாட்களில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா விமானப்படை மற்றும் கடற்படை படைகளை பெரிதும் குவித்துள்ளது. இதன் பின்னணியில், இந்த வார இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவம் […]
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிளாட்டியூ (Plateau) மாகாணத்தில், ஒரு காரீய சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சுரங்கத்தில் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரென நச்சு வாயு கசிந்து வெடிப்பு ஏற்பட்டதில், சுமார் 38 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 27 பேர் மிக மோசமான தீக்காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளுடன் மீட்கப்பட்டு, […]
செயற்கை பொது நுண்ணறிவுக்கான (Artificial General Intelligence – AGI) போட்டி தற்போது தொழில்துறை முழுவதும் காலக்கெடுகளை மிகவும் குறைத்துள்ளது. மனிதர்கள் செய்யும் பெரும்பாலான அறிவுசார் பணிகளில் சமமாகவோ அல்லது அதற்கும் மேல் செயல்படக்கூடிய அமைப்புகளையே AGI எனக் குறிப்பிடுகின்றனர். முன்பு இது பல தசாப்தங்கள் எடுக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது பல நிறுவனங்கள் இதை சில ஆண்டுகளில் அடையலாம் என்று வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளன.ஆனால் இத்தகைய கூற்றுகள் […]
ஒரு காலத்தில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் தவித்த ஒரு நாடு, இன்று உலகிலேயே மிக குறைந்த உடல் பருமன் விகிதம் (வெறும் 4%) கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது என்றால் அது ஜப்பான் தான். மறுபுறம், இந்தியாவில் சுமார் 25 சதவீதத்தினர் உடல் பருமன் சிக்கலில் சிக்கித் தவிப்பதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு குடியேறிய பிரபல யூடியூபர் ஜோசப் எவரெட், ஜப்பானியர்களின் இந்த ஆரோக்கிய ரகசியத்தையும் இந்தியாவை போன்ற நாடுகள் எங்கே […]
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ தாண்டிவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் ரூ.100க்கும் குறைவாக எங்கும் கிடைப்பதில்லை. கடந்த சில வருடங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், நாட்டில் பெட்ரோல் விலை இன்னும் குறையவில்லை. இதன் காரணமாக, விலையை வாங்க முடியாத சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மின்சார வாகனங்களை நோக்கித் திரும்புகின்றனர். […]

