விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே வியக்க வைக்கும் எலான் மஸ்க், தற்போது தனது இலக்கை அதிரடியாக மாற்றியுள்ளார். இதுவரை ‘செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம்’ என்பதில் தீவிரமாக இருந்த மஸ்க், இப்போது நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவதே தனது முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு நகரத்தை அமைத்திட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை விட நிலவு மிக அருகில் இருப்பதால், […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
மறைந்த பாலியல் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஃபைலஸ் சமீபத்தில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்த ஆவணங்களில் உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர்.. ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில் இருந்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.. இந்த நிலையில் எப்ஸ்டீன் பற்றிய மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அவர் மனிதர்களின் “ஆகச்சிறந்த இனம்” (Super-race) ஒன்றை உருவாக்கும் நோக்கில் மரபணு […]
ஈரானில் மனித உரிமைப் போராளியும், நோபல் அமைதி பரிசு பெற்றவருமான நர்கீஸ் மொஹம்மதிக்கு மேலும் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், எந்தவித எதிர்ப்பையும் ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. குற்றச்சாட்டுகள் […]
வல்லரசுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லும் திறனிலேயே தெஹ்ரானின் பலம் அடங்கியுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.. அணு திட்டத்தில் ஈரானின் நிலை தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு தூதரக மாநாட்டில் பேசிய அராக்சி, ஈரான் […]
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ‘ரிட்டர்ன் டு நேச்சர்’ (Return to Nature) என்ற பெயரில் மயான காப்பகம் நடத்தி வந்த தம்பதியினர், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் சிதைத்து, அவர்களின் உறவினர்களை ஏமாற்றிய கொடூரமான மோசடி உலக நாடுகளை உலுக்கியுள்ளது. மனிதாபிமானத்தை மறந்த ஜான் ஹால்ஃபோர்ட் மற்றும் அவரது மனைவி கேரி ஹால்ஃபோர்ட் ஆகியோரின் இந்த வக்கிரம் நிறைந்த செயல், தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டனை வரை வந்துள்ளது. […]
பிரதமர் மோடி இன்று 2 நாள் அரசுமுறை பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.. ஒரு இந்திய நடன நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பங்கேற்றதற்காக அந்த நடன நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக […]
இணையத்தில் சாதாரணமாக ஆபாச வீடியோக்களை தேடிய ஒரு நபருக்கு, அது பயங்கர கனவாக மாறிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் தோன்றிய ஜோடி அவரும் அவரது காதலியும் என்பதைக் கண்டறிந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார். 2023ஆம் ஆண்டு, ஹாங்காங்கைச் சேர்ந்த எரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலி எமிலியுடன் தென் சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவர் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு […]
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான விசாரணை தொடர்பான, 30 லட்சம் பக்கங்கள் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள், எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வெளியீடுகளின் ஒரு பகுதியாகும். இதில் நீதிமன்றத் தாக்கல் ஆவணங்கள், உள் மின்னஞ்சல்கள் மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலான விசாரணை தொடர்பான ஆதாரங்கள் ஆகியவை அடங்கும்.இதுவரை, சுமார் 3.5 மில்லியன் பக்க ஆவணங்கள் […]
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அரங்கேறியுள்ள பயங்கர வெடிகுண்டு தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகரின் பரபரப்பான ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள தெர்லாய் இமாம்பர்காவில் (வழிபாட்டுத் தலம்) நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில், இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. தெர்லாய் இமாம்பர்கா வளாகத்தில் […]
வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஒரு பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்த குண்டுவெடிப்பு, இஸ்லாமாபாத்தின் ஷாசாத் டவுன் பகுதியில் உள்ள தர்லாய் இமாம்பர்காவில் நிகழ்ந்தது. இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சிறிது நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதலில் […]

