இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலனை, எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்து 2.35 மணிக்கு விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 179 கிமீ நீள்வட்டப்பதையில் சந்திராயன் 3 நிலை நிறுத்தப்பட்டது. எல்.வி.எம் 3 எம்4 S200 திட பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில். சந்திரயான் 3 வின்கலத்தைச் சுமந்து செல்லும் LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. சந்திராயன் 3 […]

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பாரிஸில் நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக நேற்றைய தினம் பிரான்ஸ் சென்றடைந்தார். அவரை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் வரவேற்றார். பாரிஸில் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி “உலகின் பழமையான மொழி […]

நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கி ஜலசமாதியாகினர். நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் இப்போது ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டு அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். சாகச பயணம் செய்ய வேண்டும் […]

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆறு மைல் ஆழத்தில் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கு வட-வடகிழக்கே சுமார் 170 மைல் (270 கிலோமீட்டர்) தொலைவில் ஏற்படுத்தியுள்ளது. புவேர்ட்டோ ரிக்கோ உட்பட பல […]

பிரான்ஸிடம் இருந்து மேலும் 26 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 14-ம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் எனப்படும் பாஸ்டில் தினத்தையொட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் செல்ல உள்ளார். பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் எம் நேவல் ஜெட் மற்றும் மூன்று கூடுதல் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர […]

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், டேட்டா புளோ மற்றும் எச்ஆர்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பணியாளர்களுக்கு உணவுப் படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை […]

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கடந்த ஜூன் மாதம் தனது 86-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு கூடுதலாக புற்றுநோய் தாக்குதலால் நுரையீரல் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் முதல் அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 12ஆம் தேதி அவர் இறந்தார். இந்நிலையில் மறைந்த முன்னாள் […]

சிரியாவில் அமெரிக்கா MQ 9 ட்ரோன்கள் மூலமாக நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த தீவிரவாத தலைவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை சில நாட்களுக்கு முன்பு ஈராக்-சிரியா எல்லைப் பகுதி அருகே ரஷ்ய போர் விமானங்கள் இடை மறித்து நேருக்கு நேர் மோத வந்ததாக கூறப்பட்டது. இது […]

அந்தமானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள பைசபாத் பகுதியில் இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் […]

மெக்சிகோவில் மனைவியைக் கொன்று அவருடைய மூளையை உணவுடன் கலந்து சாப்பிட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவைச் சேர்ந்தவர் அல்வாரோ. பில்டராக பணி புரிந்துள்ளார். இவரது மனைவி மரியா மான்செராட். இவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், அல்வாரோ தன் மனைவியை கடந்த ஜூன் 29ஆம் தேதி கொலை செய்து உள்ளார். […]