இந்தோனேசியாவின் பண்டா ஆச்சேவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டதற்காக ஒரு இளம் தம்பதியினருக்கு பொது இடத்தில் 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டது, இது பிராந்தியத்தின் கடுமையான ஷரியா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தண்டனையாகும். மேலும் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் ஒரே இந்தோனேசிய மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த உலகளாவிய கவலைகளை மீண்டும் தூண்டிவிட்டது. மாகாண தலைநகரில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த சவுக்கடி நடந்தது, அங்கு […]

சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது, ஆனால் அதற்காக ஆசைப்படவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் டார், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய துருக்கி, ஈரான், அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் பயணத்தின் விவரங்களை ஊடகங்களுக்கு வழங்கவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான மோதலில் அந்தந்த நாடுகளின் தலைமைகள் அளித்த ஆதரவிற்கு […]

தெற்காசியாவில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் கடுமையான வெப்ப அபாயங்களை எதிர்கொள்வார்கள் என்று உலக வங்கி அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. “ஆபத்திலிருந்து மீள்தன்மை வரை: தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்கள் தகவமைப்புக்கு உதவுதல்” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தெற்காசியா மிகவும் காலநிலை பாதிப்புக்குள்ளான பகுதியாகும். 2030 ஆம் ஆண்டு வாக்கில், தெற்காசிய மக்கள் தொகையில் சுமார் 89% […]

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தன. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால் இருநாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் […]

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சி சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர். பாகிஸ்தானில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி சிறைச்சாலையில் சுமார் 700 முதல் 1000 கைதிகள் அவர்களது சிறை அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதான வாயிலின் அருகில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தனர். இதனைப் பயன்படுத்தி, அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் […]

வடகொரியாவில் பொதுவாகவே உடுத்தும் உடை முதல் இசை கேட்பது வரை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடைய நாடாக உள்ளது. இதனால், அந்த நாடு எப்போதும் தனித்தே இருக்கிறது. இந்நிலையில், அங்கிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு செல்போன் குறித்த ஆய்வு தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட செல்போன் ஒன்று பிபிசி செய்தி நிறுவனத்திற்கு சென்றுள்ளது. […]

உலகின் மிகப்பெரிய அணு ஆயுத வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? ஹிரோஷிமா குண்டை விட 2000 மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டு இந்த நாட்டிடம் தான் உள்ளது.. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த அணு குண்டு Tsar Bomba ஆகும். இது, “Product 602” அல்லது “AN602” என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. இதற்கு “இவான்” என்று குறியீட்டுப் பெயர் உள்ளது. இந்த அணுகுண்டு ஒரு சோவியத் வெப்ப […]

அதிவேக ரயில்கள் உலகின் பல நாடுகளில் இருந்தாலும், சீனாவின் புல்லட் ரயில்கள் அதன் மென்மையான ஓட்டம், பொறியியல் நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகளால் தனித்தன்மை பெற்றவை. தற்போது, இந்த ரயில்களின் நிலைத்தன்மையை நிரூபிக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பயண வீடியோ பதிவாலரான லவ்ப்ரீத் ஜக்கி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், மணிக்கு 280 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் ஜன்னலில் நாணயத்தை […]

நடப்பாண்டில் கோவிட்-19 மீண்டும் பரவுவது கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டில் இன்னும் கொடிய அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஜப்பானிய பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, அரசாங்கம் பொதுமக்களிடம் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா முதன்முதலில் 2019 ஆம் […]

கிரேக்க நாட்டில் உள்ள ரோட்ஸ் கடற்கரையில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரோட்ஸ் கடற்கரையிலிருந்து 16 மைல் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியின் பெரும்பகுதியை உலுக்கியது .இந்த நிலநடுக்கம் துருக்கி, எகிப்து, சிரியா, கிரீஸ் மற்றும் அருகிலுள்ள பல நாடுகளிலும் உணரப்பட்டதாக பிராந்திய நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டோடெக்கானீஸ் தீவுகள் பகுதியில் 68 கிலோமீட்டர் (42 மைல்) […]