தலைக்கேறிய ஆத்திரம் தீயில் கருகிய 5 பேர்….! அடியோடு அழிந்த குடும்பம்….!

கடலூர் செல்லாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரகாஷ், தமிழரசி தம்பதிகள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தமிழரசியின் தங்கை தனலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்குரு என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு லட்சன் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது.

இந்த நிலையில், தனலட்சுமியின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மது போதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அத்துடன் வேறொரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது ஆகவே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனலட்சுமி தன்னுடைய கைக்குழந்தையுடன் அக்கா தமிழரசி வீட்டுக்கு சென்று விட்டார்.

சத்குரு தற்சமயம் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை நாடினார். இந்த விவாகரத்து பத்திரத்தில் தனலட்சுமி கையெழுத்திட மறுத்ததால் அவர் கோபத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. புதன்கிழமை காலை அக்கா வீட்டிலிருந்த தனலட்சுமியை பார்ப்பதற்காக சத்குரு வந்திருக்கிறார்.

அப்போது விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு தனலட்சுமியிடம் வற்புறுத்தி சண்டையில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் அதற்கு தனலட்சுமி திட்டவட்டமாக மறுத்து விட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய நிலையில், தான் தயாராக கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்ட சத்குரு, அதன் பிறகு மனைவி தனலட்சுமி மீதும் ஊற்றினார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனலட்சுமி என் சகோதரி தமிழரசி மற்றும் அவருடைய தாயார் செல்வி உள்ளிட்டோர் இதனை தடுக்க முயற்சி செய்தபோது அவர்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி இருக்கிறார் சத்குரு. அருகில் அழுதபடி நின்றிருந்த குழந்தைகள் லட்சன் மற்றும் ஹாசினி உள்ளிட்டோர் மீதும் பெட்ரோல் பட்டு இருக்கிறது தலைக்கேறிய ஆத்திரத்தின் காரணமாக, எல்லோரின் மீதும் தீ வைத்த சத்குரு தன்னையும் எரித்துக் கொண்டார்.

இந்த கொடூர சம்பவத்தில் சத்குரு மனைவி தனலட்சுமி இவர்களுடைய 9 மாத குழந்தை லட்சன் தனலட்சுமியின் சகோதரி தமிழரசி அவருடைய 4 மாத குழந்தை ஹாசினி மற்றும் தனலட்சுமியின் தாய் செல்வி உள்ளிட்டோர் தீ பற்றி எறிய தொடங்கினர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் குடும்பத்தோடு பற்றி எரிந்த காட்சியை கண்டு அதிர்ந்து போயினர்.

கதவை திறக்க முடியாததால் உடைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் எல்லோரும் அதற்குள் தீயில் கருகி விழுந்துவிட்டனர். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதற்கும் சம்பவ இடத்திலேயே தமிழரசி மற்றும் 2பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

சத்குரு மற்றும் தனலட்சுமி செல்வி உள்ளிட்ட மூன்று பேரும் 90 சதவீதத்தீ காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்குரு, தனலட்சுமி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். ஆகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.

தாய் செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில், தற்சமயம் சிகிச்சை பெற்று வருகிறார் குடும்ப தகராறில் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

அவசரப்பட்ட்டுடியே குமாரு காய்கறி வியாபாரியிடம் கைவரிசை….! 2 திருடர்கள் சிறையில் அடைப்பு….!

Thu Feb 9 , 2023
ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்ற நபர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று மாலை திருமுல்லைவாயிலில் ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன் அருகே மிதிவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த 2 மர்ம அவர்கள் இவரை வழிமறித்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக உடனடியாக திருமுல்லைவாயில் காவல் […]

You May Like