சென்னை திருவொற்றியூர் எம்ஜிஆர் சாலையில் அரசின் டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. இங்கே மது வாங்க எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் கோழி செல்வம் (32) என்பவர் நேற்று மதியம் வந்திருந்தார். அதே கடைக்கு எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மனோஜ் (24) எந்தவரும் வந்திருந்தார் இருவரும் கையில் கத்தியை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் குத்தி விடுவதாக பாவலா செய்து வந்தனர்.
அப்போது திடீரென்று கோழி செல்வம், மனோஜை உண்மையிலேயே கத்தியால் குத்திவிட்டார். இதனை கண்டு அருகில் இருந்த 55 வயது மதிக்கத்தக்க முனிவர் ஒருவர் கருத்தில் கூச்சலிட்டார்.அவரையும் கோழி செல்வம் குத்தினார். இதன் காரணமாக, இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இது தொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் காயமடைந்த இருவரையும் காவல்துறையினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே மனோஜ் மற்றும் முதியவர் என்று இருவருமே உயிரிழந்தனர்.ஆகவே கோழி செல்வத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.