சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும்.
இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் செய்யும் மதுகுடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சவாரிக்காக முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொள்ளும்போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆனால், ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகனச் சட்ட விதிப்படி, இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்றால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.