தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) அறிவித்திருந்த இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் 180 காலிப் பணியிடங்கள், மற்றும் தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த […]
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த மிகக் கோரமான ரயில் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். பரூனி-கதிகார் ரயில் பாதையில் உள்ள உமேஷ் நகர் ரயில் நிலையம் அருகே இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த 4 பேரும் காளி பூஜை திருவிழாவைப் பார்த்துவிட்டு, அதிகாலையில் தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கினர். சாகேப்பூர் […]
அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் […]
Rain Alert: No holiday for schools.. District Collector’s announcement….!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் நோக்கி 166 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தில் (விமான எண்: 6E 6961) நடுவானில் திடீரென எரிபொருள் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் வகையில், விமானம் அவசரமாக வாரணாசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதை விமானி உடனடியாக கவனித்தார். […]
Rasi palan | Today, these zodiac signs will face unexpected problems..!
சத் பண்டிகையை முன்னிட்டு அடுத்த 5 நாட்களில் 1,500 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தில் மக்களை இணைப்பதில், இந்திய ரயில்வே தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. சத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பயணம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு பயணியும் தங்கள் இலக்கை பாதுகாப்பாகவும் வசதியாகவும் அடைவதை உறுதி செய்ய ரயில்வே கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது. வழக்கமான ரயில் சேவைகளைவிட கூடுதலாக, […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிவிட்டதாக தகவல் ஒன்று பரவியது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், காவல்துறையினருக்கே அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது. கத்தியால் குத்தப்பட்ட அந்தப் பெண்ணின் 14 வயது மகனே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 9ஆம் வகுப்பு படித்து வரும் அந்தச் […]
ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார். ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினருடன் […]
தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) உத்தரவு, 2011-ஐ பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத் துறை, தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணை, 2011-ல் (விஓபிபிஏ ஆணை) ஒரு […]

