தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்படுகிறது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. தமிழக அரசு செயலற்ற அரசாக […]

இந்தியாவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. செப்டம்பர் 1 முதல் 7 வரை, 24 காரட் தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ.35,400 ஆகவும், 10 கிராமுக்கு ரூ.3,540 ஆகவும் உயர்ந்துள்ளது. வரும் வாரத்தில், பாதுகாப்பான முதலீடுகளுக்கான உணர்வுகள் அமெரிக்க மத்திய வங்கி கொள்கை மாற்றங்கள் மற்றும் […]

டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோவண்டி பகுதியில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இட்கா சாலை குடிசை மற்றும் இறைச்சிக் கூடம் அருகே ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட பெண் பர்வீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் தாஹா, பர்வீனின் உடலை 17 துண்டுகளாக வெட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். குடும்பத் தகராறு […]

ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஜோதி குமாரிக்கு திருமணமாகிவிட்டது. ஆனாலும், அவருக்கு ஹர்வா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சுமித் குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் கள்ள உறவு ஜோதியின் கணவருக்குத் தெரியவந்த நிலையில், அவர் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனாலும், அவர்களின் கள்ள உறவு தொடர்ந்து […]