அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேவைக்கேற்ப, […]
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்கும்போது, பொதுவாக ஆண்கள் வலிமையானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் உயரமானவர்கள், அதிக தசைகள் கொண்டவர்கள், ஓடுவதில் சுறுசுறுப்பானவர்கள், எடை தூக்குவதில் சிறந்தவர்கள். ஆனால் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைப் பொறுத்தவரை, எல்லாம் வித்தியாசமானது. உலகெங்கிலும் உள்ள புள்ளிவிவரங்கள் பெண்கள் ஆண்களை விட சராசரியாக நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் […]
தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் எனும் புனிதத் தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோவில், வைணவ மரபில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவில், “தென் திருப்பதி” என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் தான் ஒப்பிலியப்பன். இவர் பூமிதேவியுடன் கோவிலில் எழுந்தருளியுள்ளார். இந்த கோயில் சமையலில் உப்பே சேர்ப்பதில்லை. இதற்குப் பின்னணியில், ஒரு பண்டைய புராணக் கதையில் இடம் பெற்றுள்ளது. பூமிதேவி, […]
தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு […]
கின்னஸ் உலக சாதனைகள் இன்று உலகின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான புத்தகங்கள் மற்றும் பிராண்டுகளில் ஒன்றாகும். இதன் முதல் நகல் 1955 இல் அச்சிடப்பட்டது, அதன் பின்னர் இது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. 70 ஆண்டுகால இந்த பயணத்தில், கின்னஸ் சாதனை புத்தகம் வெறும் புத்தகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை, ஆனால் இப்போது அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, சமூக ஊடக நேரடி நிகழ்வுகள் மற்றும் டிஜிட்டல் தளமாக மாறியுள்ளது. அது […]
அதிமுக வாக்குச்சாவடி கிளை நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாகிகள் […]
பொதுவாக மழைக்காலத்தில் பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்துவிடும்.. இது கிராமங்களில் இருக்கும் பிரச்சனை என்று பலர் கருதினாலும், உண்மை என்னவென்றால், நகர்ப்புற வீடுகளுக்கும், குறிப்பாக திறந்தவெளி நிலங்கள், வடிகால் அல்லது தோட்டங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு பாம்புகள் ஆபத்து அதிகம்.. மழைக்காலங்களில், பாம்புகள் பெரும்பாலும் மழையிலிருந்து தஞ்சம் புகுந்து வீடுகளுக்குள் வந்து சேரக்கூடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மக்கள் ரசாயன ஸ்பேரேக்கள் அல்லது மருந்துகளை பயன்படுத்தி பாம்புகளை விரட்ட முயற்சிக்கின்றனர்… ஆனால் இயற்கையான, […]
ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு..? என பாஜக மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் […]
இந்து வேதங்களில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கும் கிரகத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் செவ்வாய்க்கிழமை குறிப்பாக அனுமன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாள் சக்தி மற்றும் ஆற்றலின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வேதங்களின்படி, செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம் அனைத்து துக்கங்களும் நீங்கும். இதனுடன், கிரக தோஷங்கள் மற்றும் சனியின் தாக்கத்திலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். ஸ்கந்த புராணத்தில் அனுமன் செவ்வாய்க்கிழமை பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]
தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]

