காலையில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்குச் செல்லும் ஊழியர்களும் அவசரத்தில் இருக்கிறார்கள். இந்த அவசரத்தில், பலர் சரியான காலை உணவைத் தவிர்த்துவிட்டு, தங்களுக்குக் கிடைக்கும் எதையும் சாப்பிடுகிறார்கள் அல்லது காபி மற்றும் தேநீரைத் திருப்திப்படுத்துகிறார்கள். ஆனால் இரவில் 7-8 மணி நேர தூக்கத்திற்குப் பிறகு, நம் வயிறு முற்றிலும் காலியாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் முதலில் சாப்பிடுவது நமது செரிமானம், ஆற்றல் அளவுகள் மற்றும் நாள் முழுவதும் நமது […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி நகரைச் சேர்ந்த தேவுடு – துர்கா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மைக்காலமாகத் தம்பதிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு இந்த விபரீத முடிவுக்கு வழிவகுத்துள்ளது. துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த துர்கா, பணிக்குச் செல்லும்போது நாகரீகமாக […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக நிர்வாகி ஒருவரை மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமதுரை அடுத்த பெரியகோட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மருதமுத்து (எ) முத்தன் (42), செங்கல் சூளை அதிபரான இவர், அதிமுகவில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மருதமுத்து […]
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த சஸ்பென்ஸ் இன்னும் சற்று நேரத்தில் உடையவுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது இறுதி முடிவை அறிவிக்கத் தயாராகி வரும் சூழலில், கள நிலவரங்கள் அதிரடியான திருப்பங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. நேற்று அன்புமணி ராமதாஸுக்கு எதிராகத் தொடரப்பட்ட சின்னம் தொடர்பான வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டது. இந்த நகர்வு, […]
தமிழ்நாட்டில் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களை காக்கவும், விளிம்புநிலை மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கவும் தமிழக அரசு 2 முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆவின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ள அதே வேளையில், தலைநகர் சென்னையில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் மார்ச் மாத ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரவுள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று ஈனும் காலச் […]
பாட்டாளி மக்கள் கட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் அவர்களே, தங்களது அடையாளமாக கருதப்படும் ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை ராமதாஸுக்கும், கட்சியின் தலைவரும் மகனுமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி இப்போது வீதிக்கு வந்துள்ளது. பாமக ஒரு அங்கீகரிக்கப்படாத […]
‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ (PM-Kisan) திட்டத்தின் 22-வது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தகுதியுள்ள விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 6,000 ரூபாயை மூன்று தவணைகளாக வழங்கி வரும் மத்திய அரசு, மார்ச் முதல் வாரத்தில் அடுத்த தவணையை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்த முறை நிதி விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான பின்னணி குறித்த முக்கிய […]
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேர்தல் […]
கோயில்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் மோட்ச கதி அடையவும் இறந்தவர்களின் பெயரிலேயே அர்ச்சனை செய்யப்படும் விநோத கோவில்கள் இந்தியாவில் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய அபூர்வமான ஆன்மீக மரபுகளைக் கொண்ட பெரும்பாலான கோவில்கள் நம் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி கோவிலில் ஒரு விநோதமான ஐதீகம் பின்பற்றப்படுகிறது. பொதுவாக […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.. […]

