சென்னையில் தெருநாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் இன்று (ஆகஸ்ட் 11) முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளும் வழங்கப்பட உள்ளன. 30 குழுக்கள் களத்தில் இறக்கம்:மாநகராட்சி சார்பில் இந்தப் பணிக்காக 30 சிறப்பு […]
இந்தியாவில் யுபிஐ தொடங்கபட்ட காலத்திலிருந்தே நுகர்வோருக்கு முற்றிலும் இலவசமாகவே வழஙகபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் ஒவ்வொரு இந்தியரும் எவ்விதமான பரிவர்த்தனை கட்டணமும் இன்றி இந்த உடனடி டிஜிட்டல் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா 2026’ மீதான விவாதத்தின் போது பேசிய அவர், இந்த மசோதாவானது 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தின்’ […]
வழக்கு விசாரணை என்ற பெயரில் தனிநபர்களை அழைக்கும் போது காவல்துறை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை தி.நகரைச் சேர்ந்த ராஜா என்பவர், விசாரணை என்ற போர்வையில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில், “விசாரணை […]
வீட்டில் ஜன்னல்களை எப்போதும் மூடியே வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். வெளியில் இருக்கும் தூசி, சத்தம், வெப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக ஜன்னல்களை மூடி வைத்தாலும், வீட்டுக்குள் போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருப்பது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். வீட்டுக்குள் காற்றோட்டம் குறையும்போது, தூசி, புகை, சமையலில் இருந்து வரும் துகள்கள், செல்லப்பிராணிகளின் கழிவுத் துகள்கள் மற்றும் பிற உட்புற மாசுக்கள் காற்றில் அதிக நேரம் தங்கக்கூடும். இதனால் வீட்டுக்குள் இருக்கும் காற்றின் […]
மதுபான பாட்டில்களுக்கு தலா ரூ.20 வரை கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மது பாட்டில்களை பயன்படுத்திய பிறகு அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வது மற்றும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை சரிசெய்யும் வகையில், மதுபான பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை என்ற […]
ஆன்மீக வழிபாட்டில் மலர்களுக்கு எப்போதுமே மிக முக்கியமான இடமுண்டு. இவ்வுலகில் பூத்துக் குலுங்கும் எண்ணற்ற மலர்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான நற்குணங்களும் பண்புகளும் உள்ளன. அவ்வகையில், ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மலர்கள் எவை என்பதும், அவற்றிற்குப் பின்னால் அமைந்த சுவாரசியமான புராணப் பின்னணிகளும் நமது வழிபாட்டு முறையோடு ஒன்றிணைந்துள்ளன. இதனாலேயே, ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் இறைவனுக்கு உகந்த வண்ண மலர்களை கையோடு எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆலயங்களில் வழிபாடு […]
குளித்த பிறகு உடலை முழுமையாக துடைக்காமல் உடனே ஆடைகளை அணியும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. குறிப்பாக அவசரமாக வேலைக்குச் செல்லும்போது அல்லது வெளியே செல்ல வேண்டிய நேரங்களில், உடலில் இருக்கும் ஈரப்பதத்தைப் பொருட்படுத்தாமல் ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள். ஆனால், உடலில் நீண்ட நேரம் ஈரப்பதம் நீடிப்பது சருமத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குளித்த பிறகு உடலை மென்மையான துணியால் நன்றாகத் துடைத்து, குறிப்பாக அக்குள், கழுத்து, மார்பகத்தின் கீழ், தொடைப்பகுதி […]
சென்னை பட்டினம்பாக்கத்தில் முதல்வர் விஜய்யின் இல்லத்திற்கு அருகாமையிலேயே புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருந்த முதலமைச்சரின் அலுவலக அறை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு அண்மையில் […]
இயற்கையாகவே கருவுறுதலை அதிகரிக்கும்” என்று கூறப்படும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த அறிவுரைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பஞ்சமே இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது நிதர்சனமான உண்மை என்றாலும், இதுபோன்ற தவறான தகவல்களால் நோயாளிகள் மருத்துவ நிபுணர்களிடம் முறையான சிகிச்சை பெறாமல் ஏமாந்து போகும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்தியா ஐவிஎஃப் ஃபெர்டிலிட்டி அமைப்பின் இணை நிறுவனரும், மருத்துவ இயக்குநருமான […]
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறி வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி தொடர்ந்து ‘தனது நிலைபாடுகளை மாற்றிக்கொண்டே இருப்பதாகவும்’, நாடாளுமன்றத்தை முடக்குவதே அவரது நோக்கம் என்றும் நட்டா கடுமையாக விமர்சித்தார். ஆரம்பத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் […]

