வெறும் பொழுதுபோக்கு அம்சமாக திரைப்படங்கள் வெளிவந்த நிலை மாறி, தற்போது வரலாறு சம்பந்தப்பட்ட கதைகளும், குறிப்பிட்ட இன மக்களின் மறைக்கப்பட்ட கதைகளும் திரைப்படங்களாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில், சமீபத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்துள்ளது. ரிஷப் செட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வியக்க வைக்கும் […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Data Analyst பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பொறியியல் படிப்பில் ஏதாவது ஒரு டிகிரி கட்டாயம் […]

எவ்வளவுதான் போலீசாரும், பெற்றோரும் எச்சரித்தாலும் கூட மாணவர்கள் படியில் தொங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பாபு என்ற தச்சு தொழிலாளிக்கு யுவராஜ் என்ற 16 வயது மகன் இருந்துள்ளார். பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றார். […]

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கேரளாவின் சில பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் இறைச்சிக் கடைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி கே ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பண்ணையில் உள்ள பன்றிகளை கொலை செய்து புதைக்க […]

தற்காலத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றை தாண்டி இன்று இன்ஸ்டாகிராம் தான் அதிகம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதன்விளைவாக ஒரு அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. திருநெல்வேலி டவுன் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி, கன்னியாகுமரியில் அறையெடுத்துத் தங்கி இளம் பெண் ஒருவர் 9 பவுன் மதிப்புள்ள நகைகளைத் திருடிக்கொண்டு ஓடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை […]

’15 வயதை தாண்டிய முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும், அது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது’ என பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் (26) என்பவர் கடந்த ஜூலை மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மைனர் பெண் என்பதால் சிறுமி பஞ்ச்குலா சிறார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதற்கிடையே, […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதியில் நிலவி வரும் நிலையில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுவை, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திராவில் பகுதிகளில் வடகிழக்கு […]

தனது வாழ்க்கையை கலைக்காகவே அர்ப்பணித்து வந்த நீல்பவன் பருவா காலமானார். அவருக்கு வயது 86 அசாம் மாநிலத்தின் புகழ்பெற்ற கலைஞர் நீல்பவன் பருவா. இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கௌகாத்தியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவர், கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் இருந்தே அவரது உடல்நிலை மோசமடைந்தது. இவருடைய மனைவி திபாலி போர்தாகூர். இவர் ஒரு பிரபல பாடகி. நீல்பவன் பருவா, அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் […]

குருபூஜை விழாக்களின் போது வாகனங்கள் ஓட்டுவதில் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான் ஜெய்ந்தி மற்றும் குருபூஜை 28-ம் தொடங்கியது. தேவர் ஜெயந்தி இன்று […]

பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.18,300 பெறலாம். உலகிலுள்ள அனைவருக்கும் பணம் என்பது எப்போதும் எந்த வயதிலும் தேவையான ஒன்று. சம்பாதிக்கும் காலத்திலேயே சிறிதளவு பணத்தை சேமித்து வைத்துக்கொண்டால் அது நமது ஓய்வுகாலத்திற்கு பின்னர் நமது எதிர்கால நிதி தேவைகளை சமாளிக்க உதவியாக இருக்கும்.  ஓய்வுகாலத்திற்கு பிறகு நீங்கள் பணத்தை பற்றி கவலையில்லாமல் வாழ 2017ஆம் ஆண்டு […]