சமூக வலைத்தலங்களில் ஆபாசபடத்தை கன்னிகாஸ்திரிகளும் பாதிரியார்களும் பார்க்கின்றார்கள்.. தூய்மையான இதயத்தில்தான் ஜீஸஸ் குடியிருப்பார். இல்லை என்றால் பிசாசுதான் குடியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்… இத்தாலியில் ரோம் நகரத்தில் போப் ஆண்டவர் ஒரு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில் ’கன்னிகாஸ்திரிகள், பாதிரியார்கள் சட்டவிரோதமான உள்ளடக்கத்தை பார்க்கின்றார்கள். தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் சமூக ஊடக உலகிலும் மூழ்கிக் கிடக்கின்றர். என்று கூறினார். ஆன்லைனில் ஆபாசங்களின் அபாயம் பற்றிஅவர் பேசினார். இந்த கருத்தரங்கில் கன்னிகாஸ்திரிகள் […]
இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊதியத்தில் வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந்தச் சூழலில் தனது அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஜூலை […]
பிரபல பாலிவுட் இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 65. பாலிவுட்டில் அஹிஸ்தா அஹிஸ்தா, புலந்தி, தோடி சி பேவபாய், சூர்யா போன்ற பல படங்களை இயக்கியவர் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் இஸ்மாயில் ஷெராஃப். இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். மறைந்த இயக்குநருக்கு நடிகர்கள் கோவிந்தா, பத்மினி […]
வாஷிங்டன்னில் பிரசார நடைமுறை சட்டத்தின்படி விதிகளை மீறியுள்ளதாக மெட்டா நிறுவனத்திற்கு 24.7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன்னில் ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு பிரசார நிதி வெளிப்படுத்துதல் சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறியதாக வாஷிங்டன்னின் கிங்கவுண்டி உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அபராதம் என தெரிவிகக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 205 கோடியே 96லட்சத்து 62 ஆயிரத்து 500 […]
பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தியுள்ளார். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார். அவர், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசையும், […]
தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 […]
தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.9.54 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் கடந்த 21ஆம் தேதி முதல் 23 வரை இயக்கப்பட்டது. இதில், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் என 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு தேவையான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக […]
தமிழக்தில் மழைப் பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது… வரும் 29ம் தேதி முதல் பருவ மழை தொடங்க உள்ளது. முன் கூட்டியே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இன்று முதல் படிப்படியாக மழை பொழிவு அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4ம் தேதி […]
என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ரெகானா சித்ரவதை செய்வதாக அவரது தாயார், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரளாவில் சமூக ஆர்வலராக அறியப்படுபவர் ரெகானா பாத்திமா. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது என்று பக்தர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில், கோவிலுக்கு சென்று பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர்தான் ரெகானா. அதன்பின்னர், மாட்டு இறைச்சி பற்றிய ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். மேலும், குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் […]
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் இனி ஆடவர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன. பிற நாடுகளில் ஆடவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் நிலையில் இந்தியாவில் மட்டும் பாலின பாகுபாடு பார்க்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இதனை களையும் விதமாக பி.சி.சி.ஐ. ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி மகளிருக்கும் ஆண்களுக்கு இணையாக ஊதியம் […]