ஓய்வூதியதாரர்களின் மருத்துவ இழப்பீடு கோரிக்கையை நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான குழு, மனுக்கள் மீது முடிவெடுக்கலாம் ‌‌. மாத ஊதியதாரர்கள் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களையும் மிகவும் அச்சுறுத்தும் செலவுகளில் ஒன்று மருத்துவச்செலவு. எதிர்பாராமல் சில லட்சங்கள் வரை மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டிய சூழலில் வருகிறது. அது போன்ற நேரங்களில் மருத்துவ காப்பீடுகள் கை கொடுக்கின்றன. அதற்காகவே பல குடும்பங்கள் தங்கள் சேமிப்பாய் கருதி, மருத்துவ காப்பீடு […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ பெண்‌ குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ பெண்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்‌ தடுக்கவும்‌, அனைத்து பெண்‌ குழந்தைகளும்‌ 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்‌, பெண்‌ குழந்தை தொழிலாளர்‌ முறையை ஒழிக்கவும்‌, […]

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022-2023 ஆம்‌ ஆண்டுக்கான மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல்‌ மலம்‌ நியமனம்‌ வழங்கப்பட ஏதுவாக தற்காலிக தேர்ந்தோர்‌ பெயர்ப்‌ பட்டியல்‌ ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. கீழே இடம்‌ பெற்றுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ […]

இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு 40% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக CNG, மற்றும் சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிக்கவும், உரம் தயாரிக்கவும், சிஎன்ஜியாக மாற்றப்பட்டு ஆட்டோமொபைல்களுக்கு சக்தி அளிக்கவும் மற்றும் சமையல் நோக்கங்களுக்காக வீட்டு சமையலறைகளுக்கு குழாய் மூலம் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் […]

முதல் நாளிலேயே நடிகர் தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படம் வசூலை அள்ளியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி கிரியேசன்ஸ் […]

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே “பொன்னியின் செல்வன் -1″திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்று மதுரையில் […]

“தொடர்ந்து சோழர்கள் தொடர்பான கதாபாத்திரங்களே வருவதால், போன ஜென்மத்தில் தான் சோழனாக ஏதும் பிறந்திருப்பேனா என்று தெரியவில்லை” என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியானதை ஒட்டி, தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ […]

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகில் இருக்கும் அக்கரை சி.கிளப் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் அபர் ஜிந்தால் (39). இவர் ஒரு மருத்துவர். சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான டெல்லி அருகே இருக்கும் நொய்டாவுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். அதன் பிறகு நேற்று சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து […]

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது இந்து அமைப்பினர் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஆஸ்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செப்டம்பர் […]