புதுச்சேரி, ஏனாம் அருகே கடந்த 24-ஆம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேட்டகருவில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த அந்த பகுதியை சேர்ந்த பெட்டிரெட்டி கோவிந்து மற்றும் சல்லாடி சதிஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து காவல்துறையினர் 1 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த ரீத்து பிரகாஷ், சிந்தாலா யாமினி பிரசாத் […]

புதையல் எடுக்க குழி தோண்டியவர், அதே குழிக்குள் பூஜை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததால் நரபலி கொடுக்கப்பட்டாரா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். விவசாயம் செய்து வரும் லட்சுமணன், அவ்வப்போது புதையல் எடுப்பதாக கூறி புதையல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதையல் எடுக்க போவதாக […]

திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. திமுக 15-வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா காரணமாக இந்த ஆண்டு வரை நடைபெற்று வருகிறது. கடந்த செப்.22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. […]

சிம் கார்டு தொடர்பான விதிகளை அரசு மாற்றியுள்ளது. புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் இப்போது புதிய சிம் கார்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. சிம் கார்டு அவர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி 18 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் கார்டுகளை நிறுவனங்கள் விற்க முடியாது. அதே நேரத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஆதார் அல்லது டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஆவணத்துடன் தங்களின் புதிய சிம்மைத் […]

நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன், ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆன ’சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், […]

நடிகர் விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த சம்பவம்தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலின் வீடு, சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷால் வீட்டின் வெளியே, முதல் மாடியில் இருக்கும் படிக்கட்டில் அமைத்துள்ள கண்ணாடியினை, சிவப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த மர்ம நபர்கள், கல்லால் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியனர். […]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் ஷியைட் பகுதியில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காயமடைந்து உள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகமாக கருதப்படும் ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. கடந்த வருடம் ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றினர். அதில் இருந்து அவர்களுக்கு போட்டியாக நினைக்கும் […]

அடுத்த காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு நேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக ம்க்கள் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.. இந்த சிறு […]

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் ஹல்டியா கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயதான இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில், அந்த இளம்பெண் சமீபத்தில் கர்ப்பமாகி உள்ளார். இதனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி கர்ப்பத்திற்கு காரணமான காதலனை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடைய காதலன் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் […]

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள்‌ […]