ஓடிடியில் வர இருப்பது திருமண வீடியோ இல்லை என்றும், நயன்தாராவின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்று வாழ்த்தினர். முழு திருமண நிகழ்ச்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஓடிடி தளத்துக்கு […]
ரஷ்யாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஸ்வஸ்திக் குறியீடு கொண்ட டி.ஷர்ட் அணிந்து வந்த மர்மநபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து கிழக்கே இஷ்வெஸ்க் பகுதியில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. காலை பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர் காவலாளி , ஆசிரியர்கள் உள்பட பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இந்த தாக்குதலில் பள்ளி மாணவர்கள், காவலாளி , ஆசிரியர்கள் என மொத்தம் 13 பேர் பரிதாபமாக […]
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள தின்னபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யா (28). இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமார் டயர் கம்பெனி வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்தார். அப்போது மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைனில் பல லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதற்கிடையே, […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவரான அமலாபால், சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். தமிழ் சினிமாவில் ’சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். அதன்பின் மைனா, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’கடாவர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
மகனின் கருவை சுமக்கும் தாயின் முடிவு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் உட்டாவா மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ஹாக் (56). இவருடைய மகன் ஜெஃப் ஹாக் (32). இவருக்கு கேம்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதி 6 ஆண்டுகள் ஐவிஎஃப் (IVF) சிகிச்சை பெற்றுவந்தனர். இதன்மூலம் இவர்களுக்கு வேரா மற்றும் அய்வா என்ற இரட்டையர்கள் பிறந்தனர். தற்போது இருவருக்கும் 3 வயதாகிறது. இதையடுத்து, டிஸீல் மற்றும் லூகா என்ற […]
புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (50). இவர் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதியண்று, இவரது வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணயில், பரமசிவத்தின் 2வது மகன் விக்கி […]
ஆரணி அருகே பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் தேர்வை புரக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். புகைப்பிடித்து மாணவியின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. மாணவரை அடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த மாணவர் புகார் […]
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மேட்ரிமோனியல் (Matrimony) தளத்தில் போலி விவரங்களைப் பதிவிட்டு ரூ.1.6 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, மோசடியில் ஈடுபட்ட தம்பதியில், ஆண் ஜார்கண்ட்டைச் சேர்ந்த பப்லு குமார் என்றும், பெண் பீகாரைச் சேர்ந்த பூஜா குமாரி என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள், இருவரும் இந்த மோசடி மூலம் சுமார் 35 பேரை ஏமாற்றி […]
வங்காளதேசம் பஞ்சகரா மாவட்டத்தில் நேற்று பக்தர்களை கோவிலுக்கு ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று பிற்பகலில் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய வந்த பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தது. எதிர்பாரத நேரத்தில் படகு கவிழ்ந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை […]
வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த கார். காரணம் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் ஓடுமாம். இதுதான் இந்த காரின் சிறப்பம்சம் இதற்காக வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அந்த காரின் பெயர் சுஸுக்கி க்ராண்ட் விட்டாரா . இது மீடியம் அளவிலான […]