மாணவர்கள் ஆன்லைனில் கேம்விளையாடி அடிமையாகின்றனர் இதனால் ஆன்லைன் கேமுக்கு தடை செய்ய வேண்டும் என்ற தாயிடம் ஆன்லைன் கேம்ஸை தடை செய்வது சாத்தியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் அதிகமாக ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானர் எனவும் ஆன்லைனில் கேம்விளையாடிக்கொண்டே ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் […]

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர், ராணிப்பேட்டை, […]

சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து திருவொற்றியூர் அருகேயுள்ள திருச்சினாகுப்பம் பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு, சமையல் எண்ணெய் குழாய்களின் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட விரிசலால், காசிமேடு பகுதியில் மீனவர்கள் படகு நிறுத்துமிடத்தில் சமையல் எண்ணெய் குளம் போல் தேங்கியுள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும்  பாமாயில் எண்ணெய், திருச்சினாகுப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் […]

புதுச்சேரியில் 4 பேருந்துகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி உடைக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்துக்களை அவமதித்து பேசியதாக திமுக எம்.பி. ஆராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்து அமைப்புகள் ஏற்கனவே முழு அடைப்பை தொடங்கிவிட்டது. இந்நிலையில் புதுச்சேரியில்  4 தமிழக பேருந்துகளை கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக […]

நாட்டின் உச்சபச்ச நீதி அமைப்பாக உள்ள உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற நடைமுறைகளை 2018ம் ஆண்டு நேரலையில் ஒளிபரப்ப அனுமதி தந்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பானது 4 ஆண்டுகள் கழித்து இன்று அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் நேரலையில் வழக்குகளை ஒளிபரப்பும் வழக்கத்தை தொடங்கலாம் என்ற முடிவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி […]

சமீபத்தில் ரஷ்யா விடுவித்த உக்ரைன் நாட்டின் ராணுவ வீரரின் புகைப்படம் பிடிபடும் முன் மற்றும் பின் என குறிப்பிட்டு வெளியிடப்பட்ட போட்டோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் வீரர் ஒருவரை சமீபத்தில் ரஷ்யா சிறைப்பிடித்து வைத்தது. இதில் மைக்கேலோ டியானோவ் என்ற வீரரை சமீபத்தில் ரஷ்யா விடுவித்தது. அவரை மீட்ட உக்ரைன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக அந்த வீரரை ரஷ்யா பிடித்துச் செல்லும் முன் மற்றும் தற்போது […]

கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள மலம்புழா பகுதியை சேர்ந்தவர் 15 வயது. இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு அவப்போது வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் ஸ்ந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் […]

90களில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகளில் சுகன்யாவும் ஒருவர்.. பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா, சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன் என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.. சுகன்யா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, சின்னக் கவுண்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தான்.. அந்த படத்தில் சுகன்யாவின் […]

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.. சென்னை எழும்பூரில் பருவ கால காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவத்துரை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட 1000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் 100 செவிலியர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வந்திருந்தார்.. […]

ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட்டுகளை ஊழியர்கள் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் பால், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், […]