தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் ” இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. நாடு போற்றும் நல்ல திட்டங்களை தந்தவர் முதல்வர் ஸ்டாலின்.. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் வகையில் 5 ஆண்டுகளில் சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கி உள்ளோம்.. […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து வருகிறார்.. தொடர்ந்து இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் நெருங்குவதால் இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இதில் இடம்பெறக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல […]

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று, பிப்ரவரி 17 நடைபெறுகிறது. இது வானியல் ரீதியாக வளைய சூரிய கிரகணம் ஆகும். இதில், சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது. அதனால் சூரியனைச் சுற்றி தீப்பொறி வளையம் போல ஒளிரும் “நெருப்பு வளையம்” (Ring of Fire) தோற்றம் காணப்படும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காணப்படாது. ஆனால், அதன் நேரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய நம்பிக்கைகள் காரணமாக, பலர் […]

கடந்த 25 ஆண்டுகால நிதிச் சந்தையில் பாதுகாப்பான முதலீட்டு அரணாக திகழும் தங்கம், 2025-இன் தொடக்கத்திலிருந்து சுமார் 90% விலை உயர்வை சந்தித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எதிர்பாராத திருப்பமாக, 10 கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் ரூ. 24,500 (13.5%) சரிந்து ரூ. 1,56,200 என்ற நிலைக்கு கீழ் இறங்கியது. இந்தச் சரிவு வாரத்தின் முதல் நாளான இன்றும் (பிப்ரவரி […]

சமூக ஊடகங்களில் கவனத்தைப் ஈர்ப்பதற்காக படைப்பாளிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு சான்றாக, ஜமைக்காவை சேர்ந்த 29 வயது யூடியூபர் நிக் யார்டி (Nick Yardy) வெளியிட்டுள்ள தகவல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது 22 வயது காதலி ஜேட் (Jade) மற்றும் அவரது 44 வயது தாயான டானி (Dani) ஆகிய இருவருமே தன்னால் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு, ஒட்டுமொத்த இணையவாசிகளையும் உரைய வைத்தார் […]

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான நபர் ஒருவர் தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து, சடலத்தை இரும்புப் பெட்டியில் அடைத்து செப்டிக் டேங்கிற்குள் வீசிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போபாலின் நிஷாத்புரா பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் கோந்தியா மாவட்டத்தைச் சேர்ந்த சியா என்ற இளம்பெண்ணுடன் சமீருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீரின் குடும்பப் பின்னணியை அறியாத சியா, அவரை […]

கருவளம் தொடர்பான சிக்கல்கள் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற அறியாமை நிறைந்த காலம் மெல்ல மறைந்து வருகிறது. இன்றைய நவீன உலகில், ஆண்களும் சம அளவில் இத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை மருத்துவ உலகம் உரக்கச் சொல்கிறது. குறிப்பாக, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைபாடு என்பது இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களிடையே பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. இதற்குத் தீர்வு காண விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடும் முன், நம் […]

சென்னையில் நடைபெற்ற பாமக மாணவர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது. தொடக்கத்தில் உற்சாக மிகுதியால் மாணவர்கள் விசில் சத்தம் எழுப்பினர். இதனால், கடுப்பான அன்புமணி, “எதுக்கு இப்போ விசில்..? சத்தத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். அதன் பிறகு அரங்கில் சத்தம் குறைந்து அமைதி நிலவியது. […]

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று நிறுவனங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை அனைவரின் வாழ்விலும் நீக்கமற நிறைந்துவிட்டது. சந்தேகங்களுக்கு விடை தேடுவது முதல் சிக்கலான அலுவலகப் பணிகளை முடிப்பது வரை ஏஐ சாட்பாட்கள் (AI Chatbots) வலதுகரமாக செயல்படுகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்ப தோழர்களிடம் நாம் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அனுபவங்கள் நமக்கே வினையாக முடியும் என்பதை அண்மைய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. முதலாவது சம்பவம், அந்த்ரோபிக் நிறுவனத்தின் […]