நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.. கடந்த டிசம்பவர் மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. தங்களின் திருமண வாழ்க்கை ஆரம்பக் கட்டத்தில் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், விஜய்யும் தன்னை நல்ல முறையில் நடத்தியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.. […]

இன்றைய அவசர உலகில், 6 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை யாரையும் விட்டுவைக்காமல் வாட்டி வதைக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாக ‘ஒற்றைத் தலைவலி’ (Migraine) உருவெடுத்துள்ளது. உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் இந்த வலியால் துடித்துக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிடுகின்றன. தலையின் ஒரு பகுதியில் மட்டும் தொடங்கும் இந்த வலி, ஒருவரது அன்றாட வாழ்க்கையையே முடக்கிவிடும் வல்லமை கொண்டது. ஒற்றை […]

நட்பு கிரகங்களான சனி மற்றும் சுக்கிரன், எந்த ராசியில் ஒன்றாக வந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு போட்டி யோகத்தை நிச்சயம் தருவார்கள். மார்ச் 2 முதல் 26 வரை, இந்த இரண்டு கிரகங்களும் மீனத்தில் ஒன்றாக வரப் போகின்றன. இதில், மீனம் என்பது சுக்கிரனின் உச்ச ஸ்தானமாகும். இதன் விளைவாக, இந்த இரண்டு கிரகங்களின் இணைப்பால், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளின் கட்டம் பல […]

மோடி அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான விதிகளை திருத்தியுள்ளது. இதற்காக ஒரு புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை விதிகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று பார்க்கலாம்.. சிலிண்டர்களின் சேமிப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் இந்தியா ஒரு புதிய புரட்சியில் இறங்கியுள்ளது. காலாவதியான பழைய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய அரசு வரைவு எரிவாயு சிலிண்டர் விதிகள்-2026 ஐ வெளியிட்டுள்ளது. […]

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரும், அந்த இயக்கத்தின் ஒரு காலத்து அச்சாணியுமான ஓ.பன்னீர்செல்வம், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஒரு நபர், தனது அரசியல் வாழ்வின் பரம எதிரியாக கருதிய திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் அணியைச் […]

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சசிகலா தனது காட்டமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவை துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழலுக்குத் தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். ஓபிஎஸ்-ஸின் கட்சி தாவல் குறித்துப் பேசிய சசிகலா, “தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்றப்பட வேண்டிய ஒரு தீய […]

நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது.. நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் நடிகர் விஜய்யும் – சங்கீதாவும் பிரிந்துவிட்டதாக கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.. காரணம் விஜய்யின் பட நிகழ்ச்சிகள் அல்லது கட்சி அறிவிப்பு அல்லது மாநாடு என எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய்யின் மனைவி கலந்து கொள்வதில்லை.. எனவே விஜய்யும் சங்கீதாவும் பிரிந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.. மேலும் விஜய்யும் த்ரிஷவும் […]

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு செய்தி, திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தனது தீவிர ரசிகையும் இலங்கை தமிழ்ப் பெண்ணுமான சங்கீதாவை விஜய் கரம் பிடித்தார். இந்தத் தம்பதியருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா […]

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சிறுநீரகக் கோளாறுகள் முதல் சரும நோய்கள் வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழலில், கோடை வெயிலின் பிடியில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்துச் சித்த மருத்துவர் காமராஜ் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கோடைக்காலத்தில் வியர்க்குரு, தேமல், உடல் கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் தோன்றுவது இயல்பானது. இதுமட்டுமன்றி, பலருக்குக் மலச்சிக்கல், மூல […]

கோவை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆரம்பகட்டத்திலேயே ஒரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியின் அலுவலகத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர் மற்றும் ராமசெட்டிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த […]