பிரியாணியை மிகவும் விரும்பி சாப்பிட்டு வந்த நடிகர் சிலம்பரசன், தற்போது அசைவ உணவுகளை தவிர்த்து முழுமையாக சைவ உணவுக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். வயது அதிகரிக்கும்போது உடலின் தேவைகளும் மாறுவதால், உணவு பழக்கத்திலும் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உணவுப் பழக்கம் குறித்து பேசிய சிலம்பரசன், முன்பு தொடர்ந்து அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வதாகவும் […]

பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் வளர்த்து வரும் லார் கிப்பான் வகை குரங்கு குறித்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் அவருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நடிகர் விக்ரம், லார் கிப்பன் (Lar Gibbon) என்ற சிறிய வகை அரிய குரங்குடன் விளையாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. விக்ரமின் முடியைப் பிடித்து இழுத்தபடி அந்த அரிய வகை குரங்கு அவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் […]

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்தகால உறவில் இரண்டு ஆண்டுகளாக உடல் மற்றும் மனரீதியான துன்பங்களை அனுபவித்ததாக முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட மறைமுகமான சமூக வலைதளப் பதிவு, நடிகர் துருவ் விக்ரமுடனான காதல் முறிவு குறித்த பேச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தனது அனுபவம் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார். தனது முன்னாள் துணையின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அனுபமா, அந்த உறவு தனது உடல்நலம் […]

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்று அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பல்லாயிரக்கணக்கான சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீடு குறித்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருவதால் பொதுமக்களும் சொத்து உரிமையாளர்களும் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். முன்னதாக கணக்கிடப்பட்ட போது குறைவாக வரி மதிப்பிடப்பட்டிருந்த சுமார் 3.5 லட்சம் சொத்துக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு மட்டுமே இந்த மறுமதிப்பீடு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் […]

தமிழகத்தில் அரசு வேலைக்காக லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட குரூப்-2 தேர்வில் 41 பணியிடங்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் காலியிடங்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பின்படி, இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2 பதவிகளுக்கு 41 இடங்களும், குரூப்-2ஏ பதவிகளுக்கு […]

காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவைக் கண்டித்து, கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த பந்த் போராட்ட அறிவிப்பு இருந்தாலும், கர்நாடகா முழுவதும் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகள் வழக்கம்போலவே இயங்கி […]

லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், […]

தாய்லாந்தில் இருந்து கடந்த 4ம் தேதி டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 8 பணிப்பெண்கள் உட்பட, 145 பேர் பயணித்தனர். விமானம் நடு வானில் பறந்த போது, திடீரென பயங்கரமாக குலுங்கியது. அது பறந்து கொண்டிருந்த உயரத்தில் இருந்து திடீரென பல அடி தாழ்வாக பறந்ததால், பயணிகள் பீதி அடைந்தனர். பணிப் பெண்கள் சிலர், விமானத்திற்குள் இருந்த பயணிகள் மீது தடுமாறி விழுந்ததில், 17 பேர் […]

வீட்டில் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் பிரஷர் குக்கரை சுத்தமாக கழுவினாலும், அதன் மூடியில் இருக்கும் ரப்பர் கேஸ்கட்டை (Gasket) பலர் கவனிக்காமல் விட்டுவிடுவதாக ஆரோக்கிய வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சிறிய ரப்பர் வளையத்தை சரியாக பராமரிக்கத் தவறினால், அதுவே பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுவாக குக்கரை பயன்படுத்திய பிறகு, இந்த ரப்பர் வளையத்தின் அடியில் எண்ணெய் பிசுக்கு, சிறிய அளவிலான உணவுத் துகள்கள் மற்றும் ஈரப்பதம் […]

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடகொரியா குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகப் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென்கொரியக் கூட்டுப் படைத் தலைமைத் தளபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வோன்சான் நகரிலிருந்து காலை 6 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. சுமார் 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்து […]