நாட்டில் உள்ள சிறைகளில் மூன்றில் 2 பங்கு கைதிகள் விசாரணைக் கைதிகளாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கும், துணை நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவுகளில், ”ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரசு நடைபெற்று வருகிறது என்ற எண்ணம் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது. ஜாமீன் வழங்குவதை முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய […]
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாராஜாபுரத்தில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் இன்று காலை எட்டு மணிக்கு டீ குடிப்பதற்காக டீ கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சரவணகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணகுமார் உயிரிழந்தார். இது குறித்து குரும்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாலாஜி சரவணன் […]
கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான சட்டமன்றக் கட்சித் தலைவருமான எச்.டி.குமாரசாமி, பாஜக அரசு வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவதாகவும் கடுமையாக சாடினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி ” வளர்ச்சி என்ற பெயரில் பாஜக அரசு மக்களின் வரிப்பணத்தை திருடுகிறது. எனவே இதுபோன்ற கட்சிகள் வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார […]
சென்னையில் விவாகரத்தான பெண்களுக்கு வாழ்வு தருவதாக கூறி கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய பல் மருத்துவரையும், கூட்டாளியான பெண் மருத்துவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை காமாட்சி மருத்துவமனை அருகில் கிறிஸ்டல் பல் மருத்துவமனையை நடத்தி வருபவர் மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரன். இவர் மீது கணவனை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், […]
திருவண்ணாமலை மாவட்டம் கீழக்கடுங்காவலூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கீழக்கடுங்காலூர் கிராமத்தில் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்த தேவன் என்ற இளைஞர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற தேவன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அப்பொழுது தேவனின் பைக் மற்றும் அவரது செருப்பு, […]
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் […]
விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப ஒருநாள் தொடர் வாய்ப்பாக அமையும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்.16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலகக் கோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில், அண்மை காலமாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் எடுக்க முடியாமல் தவித்து வரும் […]
மத்தியப் பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் கிராமத்தில் உள்ள அந்தர் சிங் என்ற ஏழு வயது சிறுவன் சம்பல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் அந்த சிறுவன் கரைக்கு திரும்பவில்லை. இதனால் சிறுவன் அந்தர் சிங்கை ராட்சத முதலை விழுங்கியதாக கூறி கிராமத்தினர் முதலை ஒன்றை ஆற்றிலிருந்து பிடித்து கரையில் கொண்டு வந்து போட்டனர். பின்னர் முதலையின் வயிற்றைக் கிழித்து சிறுவனை உயிருடன் மீட்க வேண்டும் என்று […]
பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.. இதை தொடர்ந்து எடப்பாடி […]
கோவை துடியலூர் ஜி.என்.மில் அடுத்த எஸ்.என். பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை வசித்து வருபவர் பரத்குமார் (24). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிக்க சென்றார். அங்கு தனது நண்பருடன் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பரத்குமார் அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்த நபரின் மது பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டார். இதனால் இரண்டு பேருக்கம் இடையே வாக்குவாதம் […]