அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி விசாரணையில் முக்கியமான முன்னேற்றமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் இருந்து 2 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் சுமார் 350 கிலோ வெடிகுண்டு பொருட்களை மீட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மீட்பு, வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது. இதற்கு முன்பு, அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் ஆதில் அகமது […]

நாள்பட்ட சிறுநீரக நோய் உலகளவில் பெரும் சுகாதார சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த நோயாளிகள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, மருத்துவத் துறைக்கே சவாலாக உள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் உலகளாவிய நோய் சுமை பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் இந்த […]

வடகிழக்கு பருவமழையின் முதல் இரண்டு சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரமடைய உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் சீனக் கடலில் இருந்து வரும் கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வரும் வடக்குக் காற்றும் ஒருங்கிணைந்து, நாளை (நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை) […]

யூரிக் அமிலம் என்பது நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் ஒரு பொருள். இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் காணப்படும் பியூரின் என்ற பொருளை உடல் ஜீரணிக்கும்போது இது உருவாகிறது. பொதுவாக, யூரிக் அமிலம் ரத்தத்தில் கரைந்து சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், அது அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது அல்லது சரியாக வெளியேற்றப்படாவிட்டால், இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று […]

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றியமைக்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நவம்பர் மாதத்தில் சுக்கிரன், குரு மற்றும் சனிபகவான் போன்ற சக்திவாய்ந்த கிரகங்கள் நிலை மாறுவது சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் தரவுள்ளது. குறிப்பாக, நவம்பர் 11 ஆம் தேதி, குருபகவான் கடகத்தில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அதைத் தொடர்ந்து, […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது சுங்கக் கொள்கையை (Tariff Policy) உறுதியாக பாதுகாத்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான சுங்க வரிகள் (tariffs) அமெரிக்காவை “உலகின் மிகவும் செல்வமுள்ள மற்றும் மரியாதைக்குரிய நாடாக” மாற்றியதாக அவர் கூறியுள்ளார். விமர்சகர்களை “முட்டாள்கள்” என்று குறிப்பிடும் டிரம்ப், பணக்காரர்களைத் தவிர ஒவ்வொரு அமெரிக்கரும் விரைவில் குறைந்தது 2,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹1.77 லட்சம்) சுங்க வருவாய் மூலம் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]