அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறுவது 4வது நாளான நேற்று நடந்தது. முதல் நாளில் 1300 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், 2ம் நாள் 64 பேரும், மூன்றாம் நாளான நேற்று 300க்கும் குறைவான விருப்ப மனுக்களுமே அளிக்கப்பட்டிருந்தது‌. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இதன்படி அதிமுக சார்பில் […]

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதலே, வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிகள் மற்றும் விசா நடைமுறைகள் பெரும் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, அமெரிக்க கனவுடன் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக ஐடி துறையை சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவிற்குப் பணியின் நிமித்தமாகச் செல்ல உதவும் ‘ஹெச்-1பி’ (H-1B) விசா நேர்காணல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓராண்டுக்கும் மேலாக தள்ளிவைக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

“சனி நீராடு” – இது வெறும் பழமொழி மட்டுமல்ல, நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ஆரோக்கிய விதிமுறை. எந்தக் கிழமையில் என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்குப் பின்னால் ஜோதிட ரீதியான காரணங்களும், உடலியல் ரீதியான உண்மைகளும் பொதிந்துள்ளன. அந்த வகையில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறந்தது அல்ல என்றும், குறிப்பாகச் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் […]

வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை, பி.எச்.டி மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய படிப்புகளை மேற்கொள்ள, ‘தேசிய வெளிநாட்டு உதவித்தொகை’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் மக்களவையில் தெரிவித்தார். ஆண்டுக்கு தகுதியுள்ள பழங்குடியின மாணவர்கள் 20 பேருக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்ச […]

வந்தே பாரத் ரயில்களில் பிராந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே. பயணிகளின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், கலாச்சார ரீதியாகப் பொருத்தமான சுவைமிக்க உள்ளூர் உணவுகளை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களில் பிராந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்தின் சுவையை நேரடியாகப் பயணிகளிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம் பயணிகள் தங்கள் ரயில் இருக்கைகளில் அந்தந்த […]

தொழிலாளர் பதிவுத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர்களை பதிவு செய்துகொள்ள தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வைப்பு நிதித் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம், சந்தாதாரர்கள் பதிவு செய்து கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், எவ்வித சிரமுமின்றி எளிதாக தங்களது தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய […]

ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா – ஓமன் நட்புறவுக்கான சிறந்த பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருதை, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் வழங்கினார்.இவ்விருதை இருநாடுகளுக்கு இடையேயான பழங்கால நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது இந்தியாவின் 1.4 […]

ஆண்டு முடிவு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், நண்பர்களை சந்திப்பது, அதிகமாக சாப்பிடுவது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற திட்டங்கள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் இதே நேரத்தில் மருத்துவர்கள் ஒரு கவலைக்கிடமான போக்கு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக, இளம் வயதினரிடையே இதயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதில் இதய துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் திடீரென உயர்வு, மேலும் மார்பு வலி போன்ற இதயக்கோளாறு அறிகுறிகள் […]

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் […]