அரசியல் கட்சிகள் சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 8 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கையை 2025 அக்டோபர் 6 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. சமூக ஊடகம் உட்பட மின்னணு ஊடகத்தில் வெளியிடுவதற்கான அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன்னதாக சான்றிதழ் பெறுவதற்கு ஊடக […]

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுக்கு அருகில், 24 மணி நேரமும் வற்றாமல் பொங்கி வழியும் ஒரு அதிசயமாக கருதப்படும் தீர்த்தம் குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் தீர்த்தம், மனிதர்களின் கர்ம வினைகள் மற்றும் பித்ரு தோஷங்களைப் போக்கும் சக்தி கொண்டது என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த அதிசய தீர்த்தம் அமைந்துள்ள பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன், லிங்க […]

தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்படலாம். இது தவிர, உயிர்சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குழந்தைகளுக்கு தீக்காயங்களும், சில […]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். போக்ரான் எம்எல்ஏ பிரதாப் பூரி […]

தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதேநேரத்தில், வடகிழக்குப் பருவமழை தமிழகம்-புதுச்சேரி-காரைக்கால் பகுதிகள், கேரளா-மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை தொடங்க வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் […]

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது” என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை […]

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இதற்கான நோக்கமும் பின்புலமும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாமின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘உலக மாணவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள் டாக்டர் கலாமின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக உலக இளைஞர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, […]

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுத்தமில்லாத கழிப்பறை பற்றி தகவல் அளித்தால், ரூ.1,000 அன்பளிப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில்: தேசிய நெடுஞ்சாலை துறை தூய்மை பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருந்தால் அதுபற்றி தகவல் அளிக்கலாம். இதற்கு […]

ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய கை கழுவுதல் தினம் எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள பொது சுகாதார நடைமுறைகளில் ஒன்றான சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதை முன்னிலைப்படுத்துகிறது. இது 2008 ஆம் ஆண்டு உலகளாவிய கை கழுவுதல் கூட்டாண்மையால் தொடங்கப்பட்டதிலிருந்து 17 ஆண்டுகளைக் குறிக்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 15 அன்று கொண்டாடப்படும் இந்த உலகளாவிய நிகழ்வு, தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் சமூக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நிலையான கை சுகாதாரம் […]