துபாயில் இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் சைகை செய்த தவறால், பாகிஸ்தான் அணியை ஐசிசி தடை செய்ய வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், இந்திய வீரர்களை நோக்கி “6-0” என்ற சைகை செய்தார். இது, இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் […]
உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கோபசந்திரம் அருகே நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம், இரண்டு லாரிகள் மற்றும் கார் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்து காரணமாக சாலையில் சிறிது குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதே சமயம் அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த கார் மீது மீண்டும் மோதியது. இந்த […]
உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் பெருமையை விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சனீஸ்வரன் கோவில் பெற்றுள்ளது. இக்கோவிலில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் சிலை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. ஆன்மீகப் பெருமை மட்டுமன்றி, பிரம்மாண்டமான கட்டிடக் கலையாலும் இந்தக் கோவில் பக்தர்களைத் தன்வசம் ஈர்க்கிறது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மகா கும்பகோபுரமும், 54 அடி […]
டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு பாதிப்பும் மேலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்களுக்கு […]
எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லையா? கடன் தொல்லை அதிகமாகிவிட்டதா? குடும்பத்தில் சூழ்ந்துள்ள வறுமையை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், சில எளிய பரிகாரங்களையும் செய்ய வேண்டும். அதில் முக்கியம் மிளகு தீபம். அந்தவகையில் இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம். கடனில் மூழ்கிவிட்டால் நிம்மதியே போய்விடும்.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக நகர்ந்து கொண்டிருக்கும், இதனால் நிம்மதியை இழந்து மன உளைச்சலும் பெருகிவிடும். […]
கரூர் சம்பவத்தை தொடர்ந்து நான் விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் விருப்பப்பட்டே அவர்களின் கொடியுடன் வந்து எனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். தலைமையின் அனுமதியை பெற்றே வரவேண்டும் என தவெகவினரிடம் எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனாலும், அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. கரூர் சம்பவத்தை […]
இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்கிறது, அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் […]
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் கருர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் விஜய். அதேசமயம் இத்தனை நாட்கள் அவர் அங்கு செல்லாமல் […]
தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் 16-ம் தேதி வரை […]

