இந்தியாவில் இதய பாதிப்புகள் இன்று மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை (31%) இதய நோய்களாலேயே ஏற்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இளம் வயதினரிடையே இந்த நோயின் பரவல் அதிகரித்து வருவதற்கு நவீன வாழ்க்கை முறை மாற்றங்களும், மரபணு காரணிகளும் பின்னணியில் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட ‘மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் […]

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு […]

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க லாரி உற்பத்தியாளர்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “நவம்பர் 1, 2025 முதல், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25% வரி விதிக்கப்படும்” என்று […]

சமீபகாலமாக, புற்றுநோய் பலரின் வாழ்வை அமைதியாக அச்சுறுத்தும் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. ஆரம்பகால அறிகுறிகளை கவனிக்கத் தவறுவதாலும், விழிப்புணர்வு இல்லாமையாலும், முற்றிய நிலையில் பலர் உயிரை இழக்கும் சோகங்களும் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் இருந்தாலும், அறிவியல் ஆய்வாளர்கள் ஓர் எளிய இயற்கை மருந்தின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். நாம் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்றுதான் திராட்சை. ஆனால், பெரும்பாலானோர் அதன் விதைகளைத் […]

பெண்கள் நீண்ட காலமாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அவற்றைப் பற்றிய கேள்விகள் எப்போதும் எழுப்பப்பட்டு வருகின்றன. சிலர் அவை பாலியல் திறனைக் குறைப்பதாகக் கூறுகிறார்கள், இப்போது, ​​ஒரு புதிய கேள்வி எழுந்துள்ளது: அவை பெண்களில் உடல் பருமனை அதிகரிக்கின்றன. தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் உடல் பருமனை அனுபவிப்பதாக புகார்கள் உள்ளன. இதனால்தான் பல பெண்கள் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். கருத்தடை […]

நுழைவுச்சீட்டை பெற இன்று முதல் 10.2025 மாலை 5 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் […]

இலவச வீட்டு மனைப் பட்டா என்பது வெறும் நிலத்திற்கான சட்டப்பூர்வ உரிமை ஆவணம் மட்டுமல்ல. அது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள ஒரு குடும்பத்தின் எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளம் ஆகும். இந்த சட்டப்பூர்வ உரிமை கிடைப்பதால், ‘எப்போது வேண்டுமானாலும் காலி செய்ய சொல்லலாம்’ என்ற மன அச்சமின்றி மக்கள் பாதுகாப்பாக வாழ முடிகிறது. மேலும், பட்டா பெற்ற நிலத்தை கொண்டு, வங்கிகளில் எளிதில் வீட்டுக் கடன் பெற்று, அவர்கள் தரமான வீடுகளைக் […]

சமீபத்தில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்து குழந்தைகள் இறந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அக்டோபர் 6, 2025 நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மற்றும் பெதுலில் குறைந்தது 16 குழந்தைகள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தானில் மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகளுக்கு முதன்மையான காரணம் இருமல் சிரப்பில் காணப்படும் நச்சு இரசாயனமான டைஎதிலீன் கிளைக்கால் […]

ஆர்டிஇ இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இலவச மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு rteadmission@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 14417 என்ற தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. […]