கோவிட் தடுப்பூசியைப் பெறுவது தைராய்டு, நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கூறியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை தவறானது என்று நிராகரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியபோது, ​​விஞ்ஞானிகள் ஒரு சில ஆண்டுகளில் தடுப்பூசியை உருவாக்கும் சாதனையை அடைந்தனர். கோவிட்-19 தொற்றுநோயின் போது, ​​சிக்கல்கள், மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பைத் தடுப்பதில் […]

கர்ப்ப காலத்தில் தலைவலி, காய்ச்சல் மற்றும் வலியை நிர்வகிக்க பொதுவாகப் பாதுகாப்பானது என கருதப்படும் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொள்வது, குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 46 ஆய்வுகளை மேற்கொண்டு இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கையின்படி, கர்ப்பிணிகள் உட்கொள்ளும் பாரசிட்டமால் மருந்து நஞ்சுக் கொடி வழியாகக் […]

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சரியான பொருட்களைப் பயன்படுத்துவதும் மிக முக்கியம். டாக்டர் திவ்யா வோராவின் ஆலோசனையைப் பின்பற்றினால், இந்த ஆறு பொருட்களையும் உடனடியாக வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்தை பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கும். ஒவ்வொருவரும் தங்கள் வீடு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் சில சமயங்களில் நாம் சிந்திக்காமல் வீட்டில் […]

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டுகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய விளையாட்டு வீரருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும், விளையாட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்துவரும் விளையாட்டு வீரருக்கு அர்ஜூனா விருதும், விளையாட்டு மேம்பாட்டிற்கு வாழ்நாள் பங்களிப்பை அளித்தவருக்கு அர்ஜூனா விருதும் (வாழ்நாள்) வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுகளில் […]

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறை கிடைத்த உற்சாகத்தில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதற்கிடையில், வார இறுதி விடுமுறையான அக்டோபர் 4 (சனி) மற்றும் 5 (ஞாயிறு) ஆகியவற்றுக்கு நடுவில் வரும் ஒரே வேலை நாளான அக்டோபர் 3 (வெள்ளிக்கிழமை) அன்றும் அரசு விடுமுறை என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வேகமாக […]