ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கைக்குலுக்கல் விவகாரம் பெரும் பேசுப்பொருளாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், மீண்டும் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் […]

ரயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை குறைத்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ரயில் பயணத்தின் போது, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களிலும், ரயில்களில் “ரயில் நீர்” என்ற தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ரயில் நீர் பாட்டில், இந்திய ரயில்வேயால் வழங்கப்படும் ஒரு பிராண்டட் குடிநீர் பாட்டில் ஆகும். இது பயணிகளுக்கு வசதியாக ரயில்வே வளாகத்தில் விற்கப்படுகிறது. […]

நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள், நவராத்திரியின் முதல் நாளான நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நற்செய்தியை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடி பேசுகையில், நாளை முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ளது. நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் நாளில் […]

நமது அன்றாட உணவில் சில பொருட்கள் அளவோடு எடுத்துக்கொண்டால் நன்மை தரும். ஆனால், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் சைவ உணவு பிரியர்களின் விருப்பமான பன்னீர். இதில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால், இதை அதிகமாக உட்கொள்ளும்போது சில எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கிய நன்மைகள் : பன்னீர் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு […]

தமிழ்நாடு அரசு, மீன் வளர்ப்பு மற்றும் வேளாண்மைத் துறையில் உள்ள தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பு தொழில் செய்வோர், தங்கள் தொழிலை விரிவாக்கி கொள்ள முடியும். நன்னீர் மீன்வளர்ப்பு : ஒரு ஹெக்டேருக்கு ஆகும் மொத்த செலவு ரூ.11 லட்சத்தில், பொதுப் பிரிவினருக்கு ரூ.4.40 லட்சம் (40%) வரையும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.6.60 […]

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (39), ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளன. இருந்தபோதிலும், திருமண தகவல் மையங்கள் மூலம் மற்ற பெண்களையும் ஏமாற்றத் தொடங்கியுள்ளார். தேனாம்பேட்டையைச் சேர்ந்த, கணவனை இழந்த ஒரு இளம்பெண், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். திருமண தகவல் மையம் மூலம் இவருக்கு சுரேஷ்குமார் அறிமுகமாகியுள்ளார். அப்போது, சுரேஷ்குமார் தான் இன்னும் திருமணம் ஆகாதவர் என்றும், அந்தப் பெண்ணின் குழந்தைகளைத் தனது […]

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (30), ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளம்பர் அன்பு கணபதி (28) என்பவருக்கும், ராஜதுரையின் மனைவி மதுவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ராஜதுரை இதனை அறிந்ததும், கணபதியை கண்டித்துள்ளார். ஆனால், கணபதி கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்நிலையில், இரு குடும்பத்தினரும் இந்த விவகாரம் குறித்துப் பேசி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். இனிமேல் ராஜதுரையின் மனைவியுடன் பேச […]

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்கள் நாளை, செப்.22 முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசுகையில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 4 அடுக்குகளில் இருந்து (5%, 12%, 18% மற்றும் 28%) இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் ‘sin goods’ எனப்படும் ஆடம்பரப் பொருட்களுக்கு […]

உடல் பருமன் இன்று பலரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். உடல் எடையை குறைக்க பலரும் ஜிம், டயட் என பல்வேறு முயற்சிகளை கடைபிடித்து வருகின்றனர். இருப்பினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. இதற்கு காரணம், நாம் தேர்ந்தெடுக்கும் உணவுப் பழக்கம்தான். எனவே, இந்தப் பதிவில் உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இலை கீரைகள்: கீரை மற்றும் லெட்டூஸ் போன்ற […]

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் பகுதியை அடுத்துள்ள எடையூர் சங்கேந்தி கர்ணகொடை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் கீதா (28). இவர், அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (33) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். காலப்போக்கில், கணவர் சரண்ராஜுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில், கீதா தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால், […]