தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட […]
புதிய தந்தைகளிடம் காணப்படும் தற்கொலை சம்பவங்கள் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்படத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வில், புதிய தாய்களை விட புதிய தந்தைகள் தற்கொலைக்கு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது. வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வில், ஒரு குழந்தை பிறந்த முதல் 1,001 நாட்களில், தற்கொலை செய்த தந்தைகளின் எண்ணிக்கை, தாய்களின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் […]
“I will join the alliance.. but change the EPS..” TTV Dhinakaran set a condition..!! What is the BJP leadership going to do..?
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ‘அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI)’ படிப்புகளை சென்னை ஐஐடி விரிவுபடுத்துகிறது. இந்த படிப்புகள் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்வயம் பிளஸ் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து படிப்புகளுடன், ஆசிரியர்களுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்தப் படிப்பு, இலவசமாக […]
சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரது மகள் திரிஷா (20). இவரும் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த ராபின் (22) என்ற வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, திரிஷாவும் ராபினும் வேப்பேரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி […]
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் வாங்குபவர்களான இந்தியா மற்றும் சீனா மீது 100% வரை கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ள டிரம்ப், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்திய, சீனா மீது பெரும் வரிகளை விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி , வாஷிங்டனில் மூத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் […]
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் நான்கு பேரை கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க […]
மகா+ஆலயம் என்பதே மகாளயம். அதாவது, முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படும். இந்த 16 நாட்களில் எமதர்மனின் அனுமதியோடு, நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் நமது சந்ததியினர் தங்களை நினைக்கிறார்களா, நீர் மற்றும் உணவு வழங்குவார்களா என ஏங்கிக் காத்திருப்பார்கள். அவர்களின் பசி மற்றும் தாகத்தைத் தீர்க்கும் வகையில், நாம் தானங்கள் செய்வது மிகவும் அவசியம். இந்த […]
ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி என்று பழமொழி சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்குப் பெண் சக்தியைப் போற்றும் மிக முக்கியமான பண்டிகையாக நவராத்திரி விளங்குகிறது. ஆடி மாதத்தில் அம்பிகையை வழிபட தவறியவர்கள், நவராத்திரி காலத்தில் குங்கும அர்ச்சனை, விளக்கு பூஜை போன்ற வழிபாடுகளைச் செய்து அம்பிகையின் அருளைப் பெறலாம். ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவை, ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி […]

