சுபமுகூர்த்த தினமான இன்று ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் […]

அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை, தமிழகத்தின், குறிப்பாக பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது. […]

டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் வெப்பர், 90.51 மீ., எறிந்து அபார சாதனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், கிரெனடாவின் […]

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.10-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் […]

இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, வளர்ச்சியின் திசையை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாகும். இந்த சூழலில் NARI- 2025 அறிக்கை ஒரு முக்கியமான முயற்சியாகும். அதன் உதவியுடன், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அந்த அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 40% பெண்கள் தங்கள் சொந்த நகரங்களில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மோசமான தெரு விளக்குகள் மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், மன வேறுபாடுகள் ஒருபோதும் இருக்காது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.. மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பைப் பேணுகிறது என்றும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பாஜகவிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “பல்வேறு விஷயங்களில், சங்கம் பரிந்துரைகளை வழங்க முடியும், ஆனால் முடிவு எப்போதும் பாஜகவிடம் உள்ளது” என்று அவர் மேலும் […]

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ரீட்டா என்ற 25 வயது பெண், ஓடும் பேருந்திலேயே திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ரீட்டாவுக்கு வந்த ஒரு போன் கால் அவரின் இறப்புக்கு காரணமாக அமைந்தது.. ரீட்டாவின் கணவரின் மொபைல் நம்பரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.. ஆனால் மறுமுனையில் இருந்த ஒரு பெண் தன்னை அவரின் கணவரின் ‘2வது மனைவி’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு பேசி உள்ளார். மேலும் அந்த […]

சென்னை நந்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது.. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.. இந்த மாநாட்டில் முதல்வர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்துள்ளார்.. இந்த மாநாட்டில் பேசிய அவர் “ ஒப்பந்ததாரர்கள் மாநாடு என்று சொன்ன […]

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இன்று தெரிவித்திருந்தார்.. மேலும், அதற்கான புள்ளிவிவரங்களையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின் ” இந்தியாவின் தொழில்துறை தொழிலாளர்களின் பவர்ஹவுஸ் தமிழ்நாடு விளங்குகிறது! திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை […]