சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்த 13 வயது சிறுமி, கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பூங்காவிற்கு சென்றபோது, அங்கிருந்த சில நபர்கள் அச்சிறுமிக்கு திட்டமிட்டு மது கொடுத்துப் பழக்கியுள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அச்சிறுமியைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மாணவியின் நடத்தையிலும், உடல்நிலையிலும் ஏற்பட்ட தீவிர மாற்றங்களை கவனித்த பள்ளி தலைமை ஆசிரியர், உடனடியாக அவரது பெற்றோரை அழைத்து எச்சரித்து விவரத்தை கூறியுள்ளார். இதனால் பேரதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 4 பேரை உடனடியாக கைது செய்தனர். மேலும், சிறுமிக்கு மதுபானம் விநியோகித்தது மற்றும் இக்கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் 14 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : மக்களை தூங்கவிடாத டவுசர் கேங்..!! நள்ளிரவில் திக் திக்..!! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!



