மிஸ் பண்ணாதீங்க… 10 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை.‌‌..! விண்ணப்பிக்க இறுதி நாள்…?

தமிழக அரசு சார்பில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு 600 ரூபாயும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாயும், பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு 1,000 ரூபாய் அரசால் வழங்கபடுகிறது.

இந்த திட்டத்தில் தகுதியுடைய படித்த வேலை வாய்ப்பு இல்லாத நபர்கள் உதவி தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக நீங்கள் பெற்று கொள்ளலாம். கல்வித்‌ தகுதியினை வேலைவாய்ப்பகத்தில்‌ பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று‌. மாற்றுத்திறனாளிகள்‌ பதிவுசெய்து ஒரு வருடம்‌ பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. SC/ST பிரிவினர் 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும்‌ கடந்திருக்கக்‌ கூடாது. விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.72,000 க்கு மிகையாமல்‌ இருக்க வேண்டும்‌. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை. பொறியியல்‌, மருத்துவம்‌, விவசாயம்‌, கால்நடை, அறிவியல்‌ இது போன்ற தொழில்நுட்பப்பட்டம்‌ பெற்றவர்கள்‌ இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்‌.

இதற்கு நீங்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்‌ துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன்‌ சேர்த்து செப்டம்பர் 30-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாணவர்களே எல்லாம் ரெடியா இருங்க...! செப்டம்பர் 1-ம் தேதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும்...! எப்படி பார்ப்பது...?

Wed Aug 31 , 2022
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில்; இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி www.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் […]

You May Like