காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. வரலாற்று […]

மூடி திடீரென வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து, 8,50,000 stainless steel பாட்டில்களை வால்மார்ட் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது. அமெரிக்கா முழுவதும் கடைகளில் வால்மார்ட் நிறுவனத்தின் “Ozark Trail 64 oz Stainless Steel Insulated Water Bottles” எனும் பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, இதை வாங்கிய பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன. கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறு அல்லது பால் போன்றவற்றை அடைத்து வைத்து நீண்ட […]

டொனால்ட் டிரம்ப் அதிபரானதில் இருந்து, அமெரிக்காவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விதிகள் மற்றும் விதிமுறைகள் மாறி வருகின்றன. இப்போது H1B விசாவிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இனிமேல், H1B வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கும் எவரும் 88 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்கா செல்ல விரும்பும் பல இந்தியர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு 1,91,000 […]

கடந்த 2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர். இந்த தாக்குதல் உலக வரலாற்றில் மிக மோசமான ஒரு தாக்குதல். அமெரிக்கா மட்டுமல்ல பிற நாடுகளும் இந்த தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு சிறிய விமானங்களை ஒரே சமயத்தில் […]

அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை, தமிழகத்தின், குறிப்பாக பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது. […]

இந்தியா, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று (ஆகஸ்ட் 25) முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமலுக்கு வரும் புதிய சுங்க விதிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதட்டங்கள் நிலவி வருகின்றன.அஞ்சல் துறை […]

அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்: இந்தியா – அமெரிக்கா இடையே, இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேநேரம், அமெரிக்காவின் 25 சதவீத […]