இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானியில் தங்கத்தின் விலை எப்போதும் குறைந்து காணப்படுகிறது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தக் காலத்தில், தங்கம் வெறும் அலங்காரப் பொருளல்ல. நம்பகமான, நிலையான வருமான ஆதாரம். உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தால், ஒரு கிராம் தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை ஒரு சொத்தாகவும் பயன்படுத்தலாம். தேவைகளுக்கு வங்கியில் கடன் வாங்க இதைப் பயன்படுத்தலாம்.  தங்கம் அனைவரையும் ஈர்க்கிறது. இந்தியாவில் தங்கத்தின் […]

இந்தியாவில், சிறு குழந்தைகள் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவை எங்கிருந்தோ கடத்தப்பட்டு, பின்னர் உணவுக்கு ஈடாக பல்வேறு வகையான வேலைகளைச் செய்ய வைக்கப்படுகின்றன. குழந்தைகள் காணாமல் போவது தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகும். மேலும் கடத்தப்பட்ட பின்னர் குழந்தைத் தொழிலாளர், குழந்தை விபச்சாரம் மற்றும் பிறரின் வீடுகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களை […]

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே சந்திரனை ஆய்வு செய்யும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அந்த வகையில், சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மூன்றாவது முறையாக தனது பயணத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யவுள்ளதால், இஸ்ரோவின் மைல்கல் திட்டமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம் என முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சந்திரயான் 3 திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல பயணம் […]

இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மறைமுக வரியை மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வரும் வேளையில் இந்த ஸ்பெஷலான 50வது கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் ஆன்லைன் கேமிங் மீதான வரி […]

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டியில் லெபனான் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.போட்டி தொடங்கியது முதலே இந்தியா- லெபனான் அணிகள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது, […]

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைகள் இருப்பவர்களின் எண்ணிக்கை 1490 ஆக குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று புதிதாக 53 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதனை தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு 4.49 கோடி என்று கூறப்படுகிறது. இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், நோய் தொற்று பாதிப்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5,31,907 […]

இன்று நாடு முழுவதும் இருக்கின்ற இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் அதற்காக பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறையையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வர வாய்ப்புள்ளது.ஆகவே இந்த விடுமுறையை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக அதிகரித்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகிறார்கள் பக்ரீத் […]

சென்னை மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகள் நடைபெறுகின்றன. இதே மைதானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கடும் வெயிலில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதிலும் உள்ளது. இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் வெற்றி, […]

இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியிருக்கும் கௌதம் அதானி தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு உலகளவில் குறிப்பாக பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகியுள்ளார். இன்று 61 வயது பிறந்த நாள்-ஐ கொண்டாடும் கௌதம் அதானி 2 முறை செத்து பிழைத்த கதையைக் ஒரு இன்டர்வியூவில் கூறியுள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி Aap Ki Adalat என்ற நிகழ்ச்சியில் பேசிய போது அவருடைய பர்சனல் வாழ்க்கை […]