தேசிய செய்திகள்

  • இனி ஜெட் வேகத்தில் பணம் அனுப்பலாம்!. நாளைமுதல் புதிய UPI விதிகள் அமல்!. முழுவிவரம் இதோ!

    UPI இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது, வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியுள்ளது. அதேபோல் எங்கும் எப்போதும் ஏடிஎம் தேடி அலையாமல் எளிதாக பொருட்களை வாங்குவதற்கு வழிவகுத்தது. UPI-ஐ மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து புதிய விதிகளை வெளியிடுகிறது.

    அந்தவகையில், இந்தியாவில் உள்ள முக்கியமான டிஜிட்டல் பில்லிங் செயலிகள், PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகியவற்றின் பயனர்கள், நாளை முதல் (ஜூன் 16) UPI பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. NPCI (National Payments Corporation of India) வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின் படி, பணம் அனுப்ப மற்றும் பெற எடுக்கும் நேரம் குறைக்கப்பட்டு, பரிவர்த்தனைகள் இன்னும் வேகமாக முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் இந்த விதிகள் அமலுக்கு வருகிறது. அதேபோல யுபிஐ ஆப்களுக்கு சேவைகளை கொடுக்கும் பேங்குகளுக்கும் இந்த விதிகள் அமல் செய்யப்பட இருக்கிறது. அதாவது, யுபிஐ ஆப்கள் மூலம் ஒரு பரிவர்த்தனையை செய்யும்போது, அது இத்தனை நொடிகளில் முடிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் டைம் லிமிட்டை வைத்திருக்கிறது. இந்த லிமிட் மேலும் குறைக்கப்பட இருக்கிறது.யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, பணம் அனுப்பப்படுவதற்கும், அந்த பணத்தை பெறவேண்டிய நபர் பெறுவதற்கும் எடுத்து கொள்ளப்படும் நேரத்தில் இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, யுபிஐ ஆப்களுக்கு பொருந்துகிறது.

    முன்னதாக யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்புதல் (Debit) மற்றும் பெறுதல் (Credit) ஆகியவற்றுக்கு 30 நொடிகள் ரெஸ்பான்ஸ் டைம்மாக (Response Time) இருந்தது. அதாவது, பணத்தை நீங்கள் அனுப்பிய பிறகு அந்த பரிவர்த்தனை 30 நொடிகளில் முடிக்கப்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்த ரெஸ்பான்ஸ் டைம் ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு 15 நொடிகளாக குறைக்கப்படுகிறது.இதனால் இனிமேல் ஜெட் வேகத்தில் பணம் அனுப்பலாம்.

    ரென்பான்ஸ் டைம் மட்டுமல்லாமல், பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் (Transaction Status), பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் (Transaction Reversal) மற்றும் முகவரி சரிபார்ப்பு (Validate Address) ஆகியவற்றின் ரெஸ்பான்ஸ் டைம்மும் குறைக்கப்பட இருக்கிறது. யுபிஐ பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்த பிறகு பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் தெரிந்துகொள்ளவதற்கு 30 வினாடிகள் ரென்பான்ஸ் டைம்மாக இருக்கிறது. இது ஜூலை 16ஆம் தேதிக்கு பிறகு 15 வினாடிகளாக குறைக்கப்பட இருக்கிறது.

    தற்போது பரிவர்த்தனையில் வெற்றிகரமாக முடியாதபட்சத்தில், அந்த தொகை ரிவர்ஸ் செய்ய 30 நொடிகளாக ரென்பான்ஸ் டைம் உள்ளது. இதுவும் 15 வினாடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. ஆகவே, பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் 15 வினாடிகளில் முடிக்கப்படுவதால், தொகையைும் அதிவேகமாக திரும்ப பெற்று கொள்ளலாம். இதனால் கையில் போனை வைத்துக்கொண்டு காத்திருக்க தேவையில்லை.

    பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் (Payment Service Provider) ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது, ஐஎப்எஸ்சி (IFSC) மற்றும் அக்கவுண்ட் விவரங்கள் அடிப்படையில் முகவரி சரிபார்ப்பு நடக்கிறது. இந்த நேரமும் 15 நொடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. ஆகவே, ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு மேலும் அதிகவேகமாக யுபிஐ பரிவர்த்தனைகள் முடிக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    Readmore: கவனம்.. செயல்படாத பான் நம்பரை யூஸ் பண்றீங்களா ? ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.10,000 அபராதம்..

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் முதலியவற்றிற்கு உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று எடுத்துச்செல்ல வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணையவழியில் Bulk permit வழங்கும் நடைமுறை ஜூன்-2024 முதலும் மற்றும் e-permit வழங்கும் நடைமுறை ஏப்ரல்-2025 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகள், 2011-ன்படி கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் […]

நடப்பு கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24, 2024-25 ஆம் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பெயர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். […]

அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், ஜூன் 23, 24-ல் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை நடத்தி வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் […]

மாரடைப்பு ஆபத்தானது. ஆனால் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அல்லது முதலுதவி கிடைத்தால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை தெரிந்துகொள்வோம். மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது? இன்றைய காலகட்டத்தில், மாரடைப்பால் ஏற்படும் இறப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. இதற்கு உடனடி சிகிச்சை கிடைக்காததும் கூட காரணமாக அமைகின்றன. பல நேரங்களில் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே இறந்துவிடுகிறார். அதேசமயம் […]

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது உடற்கூறு ஆய்வில் […]

UPI இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது, வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியுள்ளது. அதேபோல் எங்கும் எப்போதும் ஏடிஎம் தேடி அலையாமல் எளிதாக பொருட்களை வாங்குவதற்கு வழிவகுத்தது. UPI-ஐ மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து புதிய விதிகளை வெளியிடுகிறது. அந்தவகையில், இந்தியாவில் உள்ள முக்கியமான டிஜிட்டல் பில்லிங் செயலிகள், PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகியவற்றின் […]

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியைக் கடக்க வேண்டும். இது ஒரு இயற்கையான செயல்முறை, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் ஒரு பகுதியாகும். ஆனால் பல விஷயங்கள், பல பயங்கள் அவ்வபோது எழும். அவற்றை நாம் பெரும்பாலும் வெளிப்படையாகக் கேட்க தைரியம் இல்லை.இந்தக் கேள்விகளில் ஒன்று, உடலில் மாதவிடாய் இரத்தம் தேங்கி நின்றால் அது ஆபத்தானதா? இந்தக் கேள்விக்குப் பின்னால் பயமும் பல தவறான புரிதல்களும் உள்ளன. பல […]

மத்திய பிரதேசத்தில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 4 நக்சல்கள் பலியாகினர். நாட்டிலிருந்து நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான ஒரு பெரிய மோதலில் நான்கு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் நக்சலைட்டுகள் அடங்குவர். அவர்களிடமிருந்து ஒரு பதுக்கல் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பகுதியில் பலத்த மழை […]

கல்வி உதவித்தொகையுடன் முதுநிலை தமிழ் படிப்பில் சேர மாணவர்கள் ஜூலை 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இந்த நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் 5 ஆண் கால ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு, முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஏற்புடன் […]