தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது : ஆளுநர் ஆர்.என் ரவி உரை

2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.


தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், சபாநாயகர் அப்பாவு உரையை தமிழில் படிக்கவிருக்கிறார். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் மதியம் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என முடிவெடுக்கப்படும். வருகின்ற 11 ஆம் தேதி ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் உரை தொலைக்காட்சிகளில் நேரலை…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் ஆற்ற இருக்கும் 2வது உரை இதுவாகும். சட்டப்பேரவையில் ஆளுநர் படிக்கும் உரையை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் பற்றியும் இடம் பெற்றிருக்கும். அதேபோல், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் குறித்த மசோதா, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

KOKILA

Next Post

தூக்கமின்மைக்கு தீர்வு காண உதவும் அஸ்வகந்தா....

Mon Jan 9 , 2023
உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பல்வேறு நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் திறன் கொண்ட சிறந்த மருந்து அஸ்வகந்தா. பாரம்பரிய இந்திய ஆயுர்வேத மருந்தாய் பல காலங்களாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது உடலின் வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும். பல ஆயுர்வேத நிபுணர்களின் கருத்துக்களில் அஷ்வகந்தா வேர்கள் சிறந்த தூக்கம் பெறுவதற்கு ஏற்றது என குறிப்பிடப்படுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. நினைவுக் குறைவை நீக்கவும் நினைவை மேம்படுத்தவும் அஷ்வகந்தா உதவுகிறது. மூளையின் […]
aswagandha

You May Like