தேசிய செய்திகள்

  • 12,000 விண்ணப்பதாரர்கள்; 450 பேரிடம் நேர்காணல்!. ஒருவரைக்கூட பணியமர்த்தாத நிறுவனம்!. என்ன காரணம் தெரியுமா?

    AI-ஐ பயன்படுத்தி, தீர்வுகளை உருவாக்கிய காரணத்தால், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று நேர்காணல் செய்த விண்ணப்பதாரர்களில் ஒருவரைக்கூட தேர்வு செய்யாத சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனம், ஆரம்ப நிலை டெவலப்பர் பதவிக்காக வருடத்திற்கு ரூ.20 லட்சம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு முயற்சி மேற்கொண்டது. இதற்காக 12,000 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதிலிருந்து 450 பேரிடம் நேர்காணல் செய்யப்பட்டது. ஆனால், ஒருவரையும் தேர்வு செய்ய முடியவில்லை.

    இதுதொடர்பாக Reddit பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் ChatGPT போன்ற AI-ஐ பயன்படுத்தி தீர்வுகளை வழங்குகிறார்கள். இந்த அனுபவத்தை Developers India என்ற Reddit குழுவில் பகிர்ந்த அந்த நிறுவனம், “12,000-க்கும் மேற்பட்டோர் வேலைக்காக விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்களில் 10,000-க்கும் மேலானவர்களை தகுதி, திறன் குறைவாக இருப்பது அல்லது பணிக்குத் தேவையானத் தகவல்களுடன் ஒத்துப்போகவில்லையென்பதால் பணியமர்த்தவில்லை என்று கூறியுள்ளது. மேலும், “நாங்கள் கடுமையாக இருக்க விரும்பவில்லை, ஆனால் விண்ணப்பதாரர்களின் நேரத்தையும் எங்களுடைய நேரத்தையும் வீணாக்காமல், அவர்களை நேர்காணல் சுற்றுகளுக்கு அழைத்து பின்னர் நிராகரிப்பதைத் தவிர்க்கவேண்டியதற்காக இதை செய்தோம்,” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிறுவனம் நேர்காணல் நேரத்தில் ChatGPT போன்ற கருவிகளை பயன்படுத்த அனுமதித்திருந்தாலும், விண்ணப்பதாரர்களின் பதில்கள் அடிப்படை புரிதல் இல்லாமல் இருந்தன. அதாவது, அவர்கள் AI-generated பதில்களை நகலெடுத்து பயன்படுத்தினாலும், அவற்றின் அடிப்படையை உணரவில்லை என்பது தெரிய வந்தது. “நாங்கள் விண்ணப்பதாரர்கள் GPT பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க கூட அனுமதித்தோம்,” ஆனால், நேரம் மற்றும் இடம் சிக்கல்களை (time or space complexity) பற்றி கேட்கும் போது, அல்லது அவர்கள் வழங்கிய குறியீட்டை விளக்கும்போது, பலராலும் பதிலளிக்க முடியவில்லை,” என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு குழு குறிப்பிட்டதாவது, பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் “vibe coding” என்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அதாவது, AI உருவாக்கிய பதில்களை நகலெடுத்து ஒட்டுகிறார்கள், ஆனால் அதின் அடிப்படை தர்க்கத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

    மேலும், AI பயன்படுத்தும் விண்ணப்பதாரர்களால் ஆட்சேர்ப்பு நடைமுறை சவாலாக மாறிவிட்டதாக தெரிவித்தது. தொழில்நுட்ப திறனின் உண்மையானதன்மையை மதிப்பீடு செய்வதற்காக, சில நிறுவனங்கள் நேரடி குறியீடு எழுதும் தேர்வுகள் மற்றும் நேரடி நேர்காணல்களை (live coding & in-person interviews) அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவம், AI கருவிகளை புரிந்து கொண்டு சிறந்த முறையில் பயன்படுத்தும் திறன் மற்றும் அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்வது முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.

    இந்த பதிவு ஆன்லைனில் கலவையான எதிர்வினைகளை பெற்றது. சில பயனர்கள் பல பயனர்கள் நிறுவனத்தின் விரக்தியை ஆதரித்தாலும், மற்றவர்கள் தவறான நேர்காணல் உத்தியைக் கடுமையாக விமர்சித்தனர். ஒரு பயனர், “உங்களுடைய ஆட்சேர்ப்பு குழு தவறான டெவலப்பர்களை கொண்டு வருகிறார்களோ, அல்லது உங்கள் ஆட்சேர்ப்பு செயல்முறையில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதோ,” என்று pointed out செய்தார். மற்றொரு பயனர் எழுதினார், “DSA சுற்றில் AI ஐ அனுமதிப்பது மிகவும் மோசமானது என்று பதிவிட்டிருந்தார்.

    Readmore: நடுவானில் புகை.. அவசர அவசரமாக தரையிரக்கப்பட்ட லண்டன் விமானம்..!! பெரும் பரபரப்பு..

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

AI-ஐ பயன்படுத்தி, தீர்வுகளை உருவாக்கிய காரணத்தால், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று நேர்காணல் செய்த விண்ணப்பதாரர்களில் ஒருவரைக்கூட தேர்வு செய்யாத சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனம், ஆரம்ப நிலை டெவலப்பர் பதவிக்காக வருடத்திற்கு ரூ.20 லட்சம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு முயற்சி மேற்கொண்டது. இதற்காக 12,000 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதிலிருந்து 450 பேரிடம் நேர்காணல் செய்யப்பட்டது. ஆனால், ஒருவரையும் தேர்வு செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக […]

தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. இந்த திட்டத்தின் கீழ் ரூ.40,000 வரை மானியம் வழங்கப்படும். […]

லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை உறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA35 என்ற விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்பட்டது. இது ஹீத்ரோவிலிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரம் கழித்து, நடு வானில் புகை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹீத்ரோவுக்கே திரும்பி வந்தது. விமானம் டோவர் ஜலசந்தி பகுதியில் பல முறை சுற்றி வட்டமிட்ட பின்னர் பாதுகாப்பாக […]

இந்தியாவில் கிரிமினல்களை அதிகமாக சேர்க்கும் கட்சி பாஜக என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார் ‌ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி; பழனியில் அமைச்சர் சேகர்பாபு முருகன் பக்தர் மாநாடை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ராமா ராமா என்று சொல்லிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லியாவது மாற்று வேடத்தில் வரலாம் என உள்ளே வருகின்றனர் பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் […]

வாயில் உள்ள தொற்றுநோய் கிருமிகள், குறிப்பாக பாக்டீரியாக்கள், உடல்நலத்துடன் நேரடி தொடர்புடையவை என்பதனை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இருப்பினும், வாயில் உள்ள இந்த மைக்ரோப்களின் சரியான சமநிலை உடல்நலத்தை பாதுகாக்க முக்கியமாக கருதப்படுகிறது. இந்தநிலையில், தற்போது வெளியான புதிய ஆய்வு, வாயில் உள்ள பாக்டீரியாக்களில் பன்முகத்தன்மை இல்லாதது மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மன அழுத்தம் என்பது ஒரு சிக்கலான மனநலக் குறைபாடு ஆகும். இது நீண்டகாலம் […]

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 406 ஐ எட்டியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் […]

கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து […]

வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 7-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்திலும், சோனியா காந்தி இதேபோன்ற வயிற்றுப் பிரச்சினைக்காக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்தில் இந்திராயானி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள தலேகாவ்ன் அருகே இந்திராயானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் திடீரென இடிந்து விழுந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் ஏராளமான சுற்றுலா பயணிகள் […]

கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் […]