பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்.. மகாராஷ்டிராவில் பயங்கரம்.!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா என்ற பகுதியில் வசித்த பெண் ஒருவர், தன்னுடைய 20 நாட்களேயான பிறந்த குழந்தையை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி மருத்துவர்கள் அந்த தாயிடம் கூறியுள்ளனர்.

ஆனால், அதற்கு முன்பே குழந்தை இறந்ததாக தெரிய வந்துள்ளது. அத்துடன் குழந்தையை உடற்கூறாய்வு செய்துள்ளனர். அப்போது, தான் மனதை உருக்கும் செய்தி தெரிய வந்தது. பெற்ற தாயே தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, தாயை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் பற்றிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Baskar

Next Post

லெஸ்பியன் என நினைத்து.. இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.!

Thu Nov 10 , 2022
முர்ஷிதாபாத் மாவட்ட பகுதியில் சாகர்திகி என்ற கிராமத்தில் அக்டோபர் 25 அன்று அந்த கொடூரம் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சிறுமிகள் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த ஆண்கள் அவர்களை லெஸ்பியன்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஏன் ஒரே படுக்கையை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அந்த மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க […]

You May Like