Robbery: கோடீஸ்வரர் அம்பானி வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது!

Robbery: நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் திருமண விழாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது, பிரபல தொழிலதிபர் விரேன் மெர்சென்டின் மகளான ராதிகாவை அவர் மணக்கவுள்ளார்.

அதன் ஒருபகுதியாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியான ப்ரீ வெட்டிங், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த மூன்று நாள் நிகழ்ச்சிக்காக ரூ.1200 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வின்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக திருச்சியை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்பானி இல்ல திருமணத்திற்கு வந்திருந்தவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம், லேப்டாப் போன்றவை திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திருச்சியை சேர்ந்த 5 பேரை டெல்லியில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Readmore: தமிழகத்தில் இன்று வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி அதிகமாக இருக்கும்…!

Kokila

Next Post

PM Modi | ”என்னைப் பார்த்து அப்படி நினைக்காதீங்க”..!! பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!

Mon Mar 18 , 2024
இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, இது போன்ற கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் நான் பங்குபெறும்போது, தலைப்பு செய்திகளில் இடம் பெறும் விஷயங்களை நான் பேச வேண்டும் என இங்குள்ளவர்கள் எதிர்பார்ப்பர். ஆனால், நான் திட்டங்களின் கெடு தேதி நோக்கி பணியாற்றும் நபர். தலைப்பு செய்தியில் இடம்பெற பணியாற்றும் நபர் அல்ல. ஆகையால், நான் கூறும் சில விஷயங்கள், ஊடகத்தினருக்கு ஈர்ப்பு இல்லாததாக […]

You May Like