தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 6000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப் பணியிடங்கள்:
கோயம்புத்தூர் – 233
விழுப்புரம் – 244
விருதுநகர் – 164
புதுக்கோட்டை – 135
நாமக்கல் – 200
செங்கல்பட்டு – 178
ஈரோடு – 243
திருச்சி – 231
மதுரை – 164
ராணிப்பேட்டை – 118
திருவண்ணாமலை – 376
அரியலூர் – 75
தென்காசி – 83
திருநெல்வேலி – 98
சேலம் – 276
கரூர் – 90
தேனி – 85
சிவகங்கை – 103
தஞ்சாவூர் – 200
ராமநாதபுரம் – 114
பெரம்பலூர் – 58
கன்னியாகுமரி – 134
திருவாரூர் – 182
வேலூர் – 168
மயிலாடுதுறை – 150
திருப்பத்தூர் – 240
கள்ளக்குறிச்சி – 116
திருப்பூர் – 240
நீலகிரி – 76
சென்னை – 344
தருமபுரி – 98
நாகப்பட்டினம் – 98
திருவள்ளூர் – 237
தூத்துக்குடி – 141
கடலூர் – 245
திண்டுக்கல் – 312
காஞ்சிபுரம் – 274
விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:
மேல்நிலை வகுப்பு (12ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.