காதலியை கொலை செய்து ஃப்ரீசரில் வைத்த காதலன்….! காரணம் என்ன….?

தலைநகர் டெல்லியில் காதல் விவகாரம் தொடர்பாக சமீப காலமாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகின்றது.அந்த வகையில், ஒரு இளம் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை அந்த இளம் பெண் கண்டித்தனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து பிரீசரில் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.


தலைநகர் டெல்லி நசப் கார்க்கை சார்ந்தவர் சச்சின் கலாத் இவர் டெல்லி உத்தம் நகரை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் காதலர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆகவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம் பெண் சச்சின் கலாத்தை வற்புறுத்தி இருக்கிறார் ஆனால் சச்சின் கடாட் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு திட்டமிட்டு இருந்தார் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட அந்த இளம் பெண் சச்சின் கெலாட்டை தொடர்ந்து தொல்லை செய்து வந்திருக்கிறார்.

அவருடைய தொல்லையிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் இருந்து வந்த சச்சின் கெலாட் ஆத்திரம் கொண்டு சில தினங்களுக்கு முன்னர் அந்த இளம் பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.

இந்த கொலை சம்பவம் வெளியில் தெரிய கூடாது என்பதற்காக அந்த இளம் பெண்ணின் சடலத்தை ப்ரீசரில் வைத்திருக்கிறார். இதனை எவ்வாறோ தெரிந்து கொண்ட டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதன் பின்னர் காதலியை கொலை செய்த சச்சின் கலாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சச்சின் கெலாட்டை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அவர் தன்னுடைய காதலியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Next Post

”ஃபர்ஸ்ட் நைட் வீடியோவை போஸ்ட் பண்ணிருவேன்”..!! வரதட்சணை கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்..!!

Wed Feb 15 , 2023
மத்திய அரசு அதிகாரி என பொய் சொல்லி திருமணம் செய்துவிட்டு, மனைவியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மொடச்சூரைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் ஜெயபால் (30). இவருக்கு அபிதா (23) என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஜெயபால் மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறியுள்ளார். ஜெயபால் சொன்னதை நம்பி அபிதாவை திருமணம் […]
bathing video

You May Like