ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதை திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் செய்யும் கோரிக்கையினை ஏற்க இயலாத நிலை உள்ளது என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது. நடப்பு கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Read more: சிவனின் புனித பாதம் இருக்கும் அதிசய தலம்.. எங்க இருக்கு தெரியுமா..?