சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன எலெக்ட்ரிக்கல் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, டெக் மகேந்திரா நிறுவன வளாகத்தில் உள்ள குடோனில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவி, குடோன் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், 5 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது குடோனில் இருந்த பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ மளமளவென பற்றி வான் முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read more: Flash: வரலாறு காணாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு..!



