“என் ஃப்ரெண்ட்ஸ் என் கூட பேசல” தனிமையின் விரக்தியில் 29 வயது இளைஞன் எடுத்த திடீர் முடிவு!

திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது நண்பர்கள் யாரும் தன்னுடன் பேசாத காரணத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் ஜெம்புநாதபுரம் காவல் சுற்றுபுரத்தை சார்ந்த பெத்துப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் விஜயன் இவரது மகன் கண்ணன் வயது 29. இவர் கட்டிடங்களில் சென்ட்ரிங் வேலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தனது நண்பர்கள் யாரும் தன்னுடன் சரிவர பேசாத காரணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது .


இதன் காரணமாக மனம் உடைந்த நிலையில் இருந்த இவர் விஷம் வாங்கி குடித்துவிட்டு வீட்டின் அருகே மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தின் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட கண்ணனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

சற்று முன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்! கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளுடன் தாயும் ரயில் முன் பாய்ந்து உடல் சிதறி பலி!

Mon Mar 6 , 2023
கிருஷ்ணகிரியைச் சார்ந்த தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சார்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அம்மு என்பவருக்கும் திருமணம் ஆகி இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த குடும்ப சச்சரவுகளின் காரணமாக மிகவும் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார் […]
IMG 20230306 WA0049

You May Like