TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 31.05.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட திட்டக்குழு (FBDP) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31.05.2025 அன்று பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, […]
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் சிட்டியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தப்கேஷ்வர் மகாதேவ் கோவில். தன்சு ஆற்றின் (Tons river) கரையில் அமைந்துள்ள இக்கோவில் இயற்கையான குகையில் கட்டப்பட்ட கோவிலாகும். இது தப்கேஷ்வர் கோயிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாகும். கம்பீரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது, இந்த புனித இடத்திற்கு அழகு சேர்க்கிறது என்றால் மிகையாகாது. கோவிலுக்கு செல்வதற்கு காடு வழியாக சிறிது தூரம் நடக்க வேண்டும். […]
நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ஐ.நா., செயலகம், அதன் ஊழியர்களில் 6,900 பேரை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஐக்கிய நாடுகள் செயலாளர் அலுவலகம் அதன் 3.7 பில்லியன் டாலர் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பணியிடங்களை நீக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் ஜூன் 13ம் தேதிக்குள் இந்த பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
திருமணமான பெண் அரசு பணியாளர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதிகாண் பருவத்திலும் கணக்கில் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பான முக்கிய மாற்றத்தை அரசு இன்று அறிவித்துள்ளது. திருமணமான பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு, இப்போது தகுதிகாண் பருவத்திலும் (Probation Period) சேவைக்காலமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய […]
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொதுத் தோட்டங்கள், பள்ளிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்ற பரந்த அளவிலான வெளிப்புற இடங்களில் தடை உத்தரவு பொருந்தும். எனினும், கஃபே உள்ளிட்ட இடங்கள் புதிய விதிகளுக்கு […]
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேரணியில் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சைஃபுல்லா கசூரி என்ற பயங்கரவாதி கலந்து கொண்டு பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. […]
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். ’அவள் ஒரு தொடர் கதை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது 75 வயதாகும் நடிகர் ராஜேஷ் நேற்று திடீரென காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மருத்துவர் காந்தராஜ், “யோகா செய்வதால் சில பயன்கள் உள்ளன. […]
மன அழுத்தம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு உட்கொள்ளப்படாதது போன்றவை உங்கள் தலைமுடி நரைப்பதை துரிதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? ஹார்வர்டில் பயிற்சி பெற்ற தோல் மருத்துவரும் தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் நீரா நாதன் கடந்த மே 27 அன்று இன்ஸ்டாகிராமில் 20 மற்றும் 30 களின் முற்பகுதியில் உள்ளவர்களுக்கு முன்கூட்டியே முடி நரைப்பது பல காரணிகளால் ஏற்படக்கூடும் என்று பகிந்துள்ளார். நிபுணர் நாதன் […]
கேரளாவில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் முன்னேறி வருவதால், வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பரவலான இடியுடன் கூடிய […]
நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில், ஓய்வுபெற்ற அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் லே. இவருக்கு வயது 74. இவர் தலைநகர் பாரீசில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகவும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக கிளினிக் வைத்தும் நடத்தி வந்தார். இந்நிலையில், ஜோயல் […]