மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத் துறை – மெடிக்கல் ஆபிசர்: 584, ரயில்வே துறை – உதவி டிவிஷனல் மெடிக்கல் அலுவலர்: 300, டெல்லி முனிசிபல் கவுன்சில் – மெடிக்கல் அலுவலர்: 376 என காலியாக உள்ள மொத்தம் 1261 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும். 2023 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அடிப்படையில் விண்ணப்பதாரரின் வயது 35க்குள் இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, பெர்சனாலிட்டி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். upsc.gvo.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினர் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பிக்க கடைசி நாள் 09.05.2023 ஆகும்.