அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சவுத்ஃபோர்க் டெய்ரி என்ற பால் பண்ணையில் நேற்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.. இதில் 18,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது.. எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாக வில்லை.. மேலும் அந்த பண்ணையை வைத்திருக்கும் குடும்பத்தினர் சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக பண்ணைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே அமெரிக்காவின் விலங்குகள் நல நிறுவனம் (AWI) ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகளை கொல்லும் கொட்டகை தீயைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. ஒரு சில அமெரிக்க மாநிலங்கள் மட்டுமே தீ பாதுகாப்பு குறியீடுகளை பின்பற்றி வருகின்றனர்.. எனினும் தீ விபத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க எந்த கூட்டாட்சி விதிமுறைகளும் இல்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்துகளில், டெக்சாஸ் பண்ணையில் ஏற்பட்ட தீ, ய மிகவும் அழிவுகரமான தீ விபத்தாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து..