TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பொதுத் தோட்டங்கள், பள்ளிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்ற பரந்த அளவிலான வெளிப்புற இடங்களில் தடை உத்தரவு பொருந்தும். எனினும், கஃபே உள்ளிட்ட இடங்கள் புதிய விதிகளுக்கு […]
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேரணியில் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் சைஃபுல்லா கசூரி என்ற பயங்கரவாதி கலந்து கொண்டு பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. […]
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். ’அவள் ஒரு தொடர் கதை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது 75 வயதாகும் நடிகர் ராஜேஷ் நேற்று திடீரென காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மருத்துவர் காந்தராஜ், “யோகா செய்வதால் சில பயன்கள் உள்ளன. […]
மன அழுத்தம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு உட்கொள்ளப்படாதது போன்றவை உங்கள் தலைமுடி நரைப்பதை துரிதப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? ஹார்வர்டில் பயிற்சி பெற்ற தோல் மருத்துவரும் தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் நீரா நாதன் கடந்த மே 27 அன்று இன்ஸ்டாகிராமில் 20 மற்றும் 30 களின் முற்பகுதியில் உள்ளவர்களுக்கு முன்கூட்டியே முடி நரைப்பது பல காரணிகளால் ஏற்படக்கூடும் என்று பகிந்துள்ளார். நிபுணர் நாதன் […]
கேரளாவில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் முன்னேறி வருவதால், வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பரவலான இடியுடன் கூடிய […]
நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில், ஓய்வுபெற்ற அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோயல் லே. இவருக்கு வயது 74. இவர் தலைநகர் பாரீசில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகவும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக கிளினிக் வைத்தும் நடத்தி வந்தார். இந்நிலையில், ஜோயல் […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த […]
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்பின், கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை […]
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420ல் முதல் |அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும். நிலுவைத் தொகையை 2024 செப்டம்பர் 1 முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 அன்று 12 மணி […]
சேலம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக வெல்டர், வர்ணம் பூசுபவர் (பொது), கம்பியாள் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், மின்பணியாள், பொருத்துநர், பொருத்துநர் […]