திருச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் சீனிவாசன் நகர் 7வது தெருவை சார்ந்தவர் சோலையப்பன். 58 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவருக்கும் இவரது மாமனார் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இவரது சின்ன மாமியார் இறந்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்கிற்கு செல்ல வேண்டாம் என மனைவியிடம் கண்டிப்புடன் கூறியிருக்கிறார் சோலையப்பன். ஆனால் கணவனின் பேச்சைக் கேட்காமல் அவரது மனைவி குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்ப வந்திருக்கிறார். இதனால் மணமுடைந்த சோலையப்பன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக அரியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.