கேரளாவைச் சார்ந்த ராணுவ வீரர், மாணவியை ரயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டவை சார்ந்தவர் பிரதீஷ் குமார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார் பிரதீஷ் குமார். கடந்த வியாழக்கிழமை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளாவுக்கு திரும்பியிருக்கிறார் பிரதீஷ். உடுப்பியில் இருந்து கேரளாவைச் சார்ந்த மாணவி ஒருவர் இவருடன் பயணித்திருக்கிறார். பயணத்தின் போது இருவரும் அறிமுகமாகி நன்றாக பேசி வந்திருக்கின்றனர். மாணவியுடன் பேச்சு கொடுத்த இவர் அவருக்கு குடிப்பதற்காக மதுவும் கொடுத்திருக்கிறார்.
மாணவியை மது குடிக்க வைத்து அவர் மது போதையில் மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் அந்த ராணுவ வீரர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி திருவனந்தபுரத்தில் இறங்கியதும் இது தொடர்பாக தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அவரது கணவர் அளித்த புகாரை தொடர்ந்து ராணுவ வீரர் பிரதீஷ் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கேரள போலீஸ் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றது. மாணவியுடன் நட்பாக பழகி அவருக்கு மது கொடுத்து ராணுவ வீரரை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாட்டை காக்கும் பணியில் இருக்கக்கூடிய ராணுவ வீரர்களில் ஒரு சில பேர் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஒட்டு மொத்த ராணுவத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படும் வகையிலிருப்பதாக குற்றம் சாட்டினர்.